திடீர் ட்விஸ்ட்..! தவெகவில் இணையும் பாஜக Ex மத்திய அமைச்சர்..! தட்டித் தூக்கும் விஜய்..!

Published : Dec 30, 2025, 06:08 PM IST

கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் தொகுதி வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்பதில் அவர் தீர்க்கமாக உள்ளார். இதனை பாஜக நிறைவேற்றாவிட்டால் அவர் தவெகவில் இணைவதில் உறுதி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

PREV
14

அதிமுகவில் முன்னாள் மூத்த அமைச்சரான செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில் பாஜகவில் இருந்தும் மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் தவெகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. தவெகவில் இணையும் அவர் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தவெகவை தொடங்கிய நிலையில் தற்போது அந்த கட்சி மிகப்பெரிய மாபெரும் மூன்றாவது கூட்டணியை அமைக்கும் வகையில் பலமடைந்து வந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தவெக கூட்டணியில் இணைவது உறுதி என்கிறார்கள். வரும் பொங்கலுக்கு முன்பாகவே இவர்கள் தவெக கூட்டணியில் இணைய உள்ளதாக செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

24

அத்தோடு இரண்டு முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும் ஏற்கனவே செங்கோட்டையன் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பிரமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சியும் தொடர்ந்து தவக கூட்டணியில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் அந்த கட்சியின் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், அளந்தகரை கிராமத்தில் பிறந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். சட்டப்படிப்பை முடித்த இவர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் அதிமுக கூட்டணியுடன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியையும் சந்தித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியையும் தழுவினார். 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு தொடர் தோல்விகளையும் சந்தித்தார். இருந்தபோதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவராக இருந்து வருகிறார். பொன்.ராதாகிருஷ்ணன் நிதித்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். பொன்.ராதாகிருஷ்ணன் வரும் சட்டமன்ற தேர்தலில் கன்னியகுமரி தொகுதி அல்லது நாகர்கோவில் தொகுதிகளில் போட்டியிட விரும்பி வருகிறார். தற்போழுது தமிழக பாஜக சார்பில் ஒரு வேட்பாளர் பட்டியல் டெல்லி மேலிடத்திற்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.

34

அதில், பொன்.ராதாகிருஷ்ணனின் பெயர் இடம்பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது. அத்தோடு சமீப காலமாகவே உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட டெல்லி பாஜக மேலிடத்தினர் தமிழ்நாட்டில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர்க்ளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில பொன்.ராதாகிருஷ்ணனை எந்த வகையிலும் கண்டு கொள்வதில்லை. இதனால், அவர் மிகுந்த மனக்குமுறலில் இருந்து வருகிறார். இது தவிர கன்னியாகுமரி தொகுதியில் தற்போது டெல்லி பாஜக மேலிடம் விஜயதாரணிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவுடன் தொகுதி பேச்சு வார்த்தை நடத்த மத்திய அமைச்சர் கோயல் சென்னை வந்திருந்தபோதும் பொன்.ராதாகிருஷ்ணனை அழைக்கவில்லை.

44

பாஜக மேலிடம் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணனை புறக்கணித்து வரும் நிலையில் மிகுந்த அதிருப்தியில் இருக்கும் அவர் எந்த நேரமும் கட்சியை விட்டு விலகலாம் என்று தெரிகிறது. பொன் ராதாகிருஷ்ணன் தற்போது எடுத்துள்ள முடிவு குறித்து டில்லி பாஜக மேலிடத்துக்கும் தகவல் சென்றுள்ளது. எனவே டெல்லி பாஜக மேலிடம் பொன்.ராதாகிருஷ்ணனை சமாதானம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி சமாதானம் செய்தால் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பாஜகவில் பணியாற்றுவார். அதேவேளை கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் தொகுதி வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்பதில் அவர் தீர்க்கமாக உள்ளார். இதனை பாஜக நிறைவேற்றாவிட்டால் அவர் தவெகவில் இணைவதில் உறுதி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories