தூய்மை பணியாளர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜய் நேரில் வந்தால் கூட்டம் வந்து விடும் என்றால் எதற்காக அரசியல் கட்சி, இது என்ன pattern என புரியவில்லை. சினிமாவை வீட்டில் பார்த்தால் கோபம் வருகிறது, ஆனால் இவர்களை வீட்டில் போய் பார்க்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜனிடம், வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஜனநாயகத்தை காப்போம் என ராகுல் காந்திக்கு ஆதரவாக தவெக தலைவர் விஜய் குரல் கொடுத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பரவாயில்லையே, வாயைத் திறந்து விட்டாரா.! வாயை திறந்து விட்டாரா தம்பி, எவ்வளவு நாட்களாக ஓடிக் கொண்டுள்ளது. பாவம் அவர் தூங்கி தூங்கிக் கொண்டிருந்தாரா என தெரியவில்லை. திடீரென யார் எழுப்பியது அவரை என தெரியவில்லை. திடீரென ராகுல் காந்தி விஷயத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக பல பிரச்சினைகள் நடைபெற்றுள்ளது.