‘‘தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி மீது மருத்துவர் ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். நீதிமன்றத்தை அவமதித்த அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும்’’ என பாமக எம்.எல்.ஏ அருள் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரில் மருத்துவர் ராமதாஸ் தலைமை தாங்கிய பாமக நிகழ்ச்சியில் பேசிய பாமக எம்.எல்.ஏ அருள் பேசுகையில், ‘‘இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது ஒரு போர். ஒரு குருஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு தூசுக்கும், இமயமலைக்கும் இடையிலே ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. அன்புமணி ஒரு தூசு. எதுக்கும் பயன்படாத ஒரு தூசு. ஒரு அந்த சின்னப் புள்ளி, இன்றைக்கு மருத்துவர் ஐயா என்ற ஒரு இமயமலையோடு மோதுகிறது. இன்னைக்கு பல திட்டங்களை, பல சதிகளை, பல துரோகங்களை பல்வேறு விதமான கோடிகளை இறைத்துக்கொண்டிருக்கிறது.