அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் நேரடியாக சசிகலாவிடம் பேசி இருக்கிறார். இந்த வியூகத்திற்கு எடப்பாடி பழனிசாமியும், டெல்லியும் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சரி, எடப்பாடி முதலமைச்சரானால் சசிகலாவிற்கு என்ன லாபம்? என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது. சசிகலாவை பொருத்தவரை அவருக்கு சொந்தமான 2000 கோடி சொத்தை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. அத்தோடு தனது பினாமிகளிடமும் பல கோடி ரூபாய் சொத்துக்களை சசிகலா குடும்பம் வைத்துள்ளதாக தெரிகிறது. இதையெல்லாம் மீண்டும் திரும்ப பெற வேண்டும் என்றால் அதற்கு அதிகாரப்பலம் தேவை. எனவே தனது சொத்து, தன் மீதான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர பாஜகவின் தயவு சசிகலாவுக்கு நிச்சயம் தேவைப்படும்.
மாநிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க அதிமுக தேவைப்படும். இதனால் அதிமுக பாஜக கூட்டணி சசிகலாவிற்கு அவசியமாகிறது. சரி, சசிகலாவின் ஆதரவு எடப்பாடிக்கு ஏன் தேவைப்படுகிறது? முதல் விஷயம் முக்குலத்தோர் வாக்குகள். தென் மண்டலங்களில் அசைக்க முடியாத சமுதாயமாக இருக்கிறது முக்குலத்தோர் சமூகம். ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்தது தென்மண்டலம். ஜெயலலிதாவே ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டதற்கு ஒரு முக்கியமான காரணமும் இதுதான். ஜெயலலிதா தனக்கு அடுத்தபடியாக ஓ.பன்னீர் செல்வத்தை வைத்திருந்தார் என்பதையும் அந்த சமூகம் இன்று வரை மறக்கவில்லை.