OEKO-TEX- என்ற சான்று கொடுக்கப்பட்ட தூய்மையான நுரை மெத்தைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இதன் பயன்பாட்டிற்கு பின்னர் மறுசுழற்சியும் செய்யலாம். இவை பூமியின் மீதான மாசுபாட்டு தாக்கத்தை குறைக்கின்றன. ரப்பர் மரங்களிலிருந்து பெறப்பட்ட லேடெக்ஸ், பருத்தி, ஆடுகளிலிருந்து பெறப்படும் கம்பளி ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கும் மெத்தைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை. இதை ரொம்ப் காலம் பயன்படுத்தவும் முடியும். நமக்கு மூச்சுத்திணறல், தூசி பூச்சிகளிடமிருந்தும், ஒவ்வாமையிடம் இருந்தும் எதிர்ப்பை வழங்குகிறது.
இதை உற்பத்தி செய்யும் போது குறைவான இரசாயனங்கள், செயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இவை பசுமையான தேர்வாக அமைகின்றன. இயற்கைக்கு ஏற்ற சூழலியல் மெத்தைகளை நாம் வாங்குவதன் மூலம் நமது ஆரோக்கியமான தூக்கத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பங்களிக்க முடியும்.