மருமகள் தாய்ப்பாலை சுவைக்க விரும்பும் வக்கிர மாமனார்! திருட்டுத்தனமாக அவர் செய்யும் காரியத்தால் மருமகள் ஷாக்!!

First Published Jun 2, 2023, 8:15 PM IST

மாமனார் தன்னிடம் தாய்ப்பால் குடிக்க ஆசைப்பட்டு வக்கிரமான செயல்களில் ஈடுபடுவதை இணையத்தில் பதிவிட்டு மருமகள் புலம்பியுள்ளார். 

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம். குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது; தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும். இதனால் பிரசவித்த பெண்கள் குழந்தையின் அருகாமையில் எப்போதும் இருந்து பார்த்து கொள்வார்கள். சில நேரங்களில் வீட்டில் மற்ற நபர்கள் இருக்கும்போதும் பெண்கள் பாலூட்ட வேண்டியிருக்கும். குழந்தையின் பசியின் முன்பு கூச்சமோ இடம் பொருள் ஏவலோ பார்க்க முடியாதல்லவா! ஆனால் இதைக் கூட காமப் பார்வையில் பார்க்க சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள். 

இணையத்தில் "என் மாமனார் ஒரு வக்கிரமானர்" என்ற தலைப்பில் பெண் ஒருவர் பதிவிட்டார். அதில், தான் தாய்ப்பால் கொடுக்கும்போது தன் மாமனாரின் செயல்கள் சங்கடத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தினர் இருக்கும் குழுவில் தாய்ப்பால் குறித்து தகாத கருத்துகளை மாமனார் சொல்லி எரிச்சல் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு பின்னர் மாமியாரிடம் அதை குறித்து சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் மாமியாரோ கூலாக, 'சரி இனி அவர் உன்பக்கம் வரமாட்டார்' என பதிலளித்துள்ளார். மாமனாரின் செயல் மோசமானது என மாமியாருக்கு புரியாமல் போனது மருமகளுக்கு கூடுதல் வருத்தமாகிவிட்டது. 

அப்படி என்ன தான் நடந்தது? 

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 7 மாத மகன் உள்ளார். அவருக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மாமனார் இடஞ்சல் கொடுத்து வருகிறாராம். குடும்பத்தினர் உள்ள இணைய சாட்டிங் குழுவில் மாமனார் கொச்சையாக பேசும்போது பிரச்சனை தொடங்கியிருக்கிறது. தன் குழந்தைக்கு தாய்ப்பாலில் பாப்சிகல்ஸ் எனும் ஐஸ் செய்யததாக மருமகள் பதிவிட்டபோது, தானும் அதை சுவைக்க விரும்புவதாக மாமனார் கூறியுள்ளார். இது குறித்து கேட்டபோது மெசேஜை சரியாக படிக்கவில்லை என்றாராம். சரி என மருமகளும் அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் சில நாளுக்கு பின்னர் தான் மாமனாரின் வக்கிர முகம் வெளிப்பட்டுள்ளது. 

அடிக்கடி தன் மகனுக்கு தாய்ப்பாலில் திண்பண்டங்கள் செய்வதை அந்த பெண் பழக்கமாக வைத்துள்ளார். இது குறித்து அறிந்த மாமனார் யாருக்கும் தெரியாமல் நைசாக போய் பேரனுக்கு வைத்திருந்த பண்டத்தை சாப்பிட்டுள்ளார். இது தெரிய வரும்போது மருமகளுக்கு கூச்சமாகவும் அருவருப்பாகவும் போய்விட்டது. இதற்கிடையில், அந்த பெண்ணின் கணவர் இந்த விவகாரத்தை கையாள தெரியாமல் குழம்பியுள்ளார். இதன் பிறகே மாமியாரிடம் சென்று முறையிட்டுள்ளார் அந்த பெண். இதற்கு மாமியார் சொன்ன பதில் மருமகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

மாமியார் தன் கணவரின் வக்கிர குணம் குறித்து சொல்லும்போது மருமகள் அருவருப்பின் உச்சத்தை அடைந்துள்ளார். அவருடைய மாமனார் பிறர் பாலூட்டுவதை பார்ப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளவராம். ஏற்கனவே அவர் வேலை செய்த அலுவலகத்தில் தாய்ப்பால் ஊட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் அத்துமீறி புகுந்தற்காக வேலையை மாற்ற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை கேட்டு மருமகள் அதிர்ந்துள்ளார். இப்படியும் ஒருமாமனாரா? என மனதுக்குள் அருவருப்படைந்த பின்னரே, அவர் இணையத்தில் இந்த சம்பவம் குறித்து எழுதியுள்ளார். அவருக்கு இணையவாசிகள் ஆறுதலும் அறிவுரையும் வழங்கி வருகின்றனர். 

click me!