ஆடி 18ம் தேதி மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் நீராடி இறைவனை வணங்குவது வழக்கம். இதனால் பயிர்களுக்குத் தேவையான நீர் வளம் கிடைக்கும் என நம்புகின்றனர். தெய்வீகமான இந்த ஆடி மாதத்தில் ஆடி 18 எனும் ஆடிப் பெருக்கு எல்லா கிராமங்களிலும் கோவில் திருவிழா, விசேஷங்கள் இருக்கும். சிறப்பு வழிபாடு, குல தெய்வ வழிபாடு செய்ய மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய குல தெய்வ கோவிலுக்குச் செல்வது வழக்கம்.
இதனால், நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமண தடை நீங்கும். கணவனின் ஆயுள் கூடும். தொழிலில் வெற்றி தேடி வரும். தொழிலில் லாபம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கும். மொத்தத்தில், இந்த மாதத்தில் தொட்டது எல்லாம் பக்தர்களுக்கு வெற்றியாக அமையும். இந்த ஆடிப் 18 விழாவில் பெண்களே அதிக அளவில் பங்கு கொள்வார்கள்.
ஆடி பெருக்கு தினத்தன்று, நீங்கள் எது வாங்கினாலும் அது பன்மடங்காக பெருகும் என சாஸ்திரம் கூறுகிறது. எனவே புது மண தம்பதிகள் இந்த நாளில் தாலி என்றழைக்கப்படும் மஞ்சள் கயிற்றை கணவர் கையால் மாற்றுகின்றனர். இந்த நாட்களில் தாலி பெருக்கி போடும் போது, நீண்ட நாட்களாக பெண்கள் மஞ்சள், குங்குமம், பூவும் பொட்டோடும் வாழ வேண்டும் என்பது ஐதீகம். சிலர் தங்கம், வெள்ளி போன்றவற்றை கூட வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள். இருப்பினும், இந்த நாட்களில் பெண்கள் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க...Thali Peruku: ஆடிப்பெருக்கு நாளில் புதுத் தாலி ஏன் மாற்றப்படுகிறது..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கோ...
1. பெண்கள் கறுப்பு நிற உடை அணிவதை தவிர்க்க வேண்டும். எனவே, மங்களகரமான பூவும், பொட்டும் வைத்து வழிபட வேண்டும். திருமண புடவை அணிய வேண்டும், மஞ்சள் பூசி, வளையல் போட்டு பூஜை செய்தால் அம்மனின் முழுமையான பலன் உண்டாகும்.
aadi perukku 2022
4, கசப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். தெய்வங்கள் வீடுகளில் வாசம் செய்யும் போது தெய்வங்கள் வீட்டின் நல்ல மங்களம் பொங்கும் வாசம் வீச வேண்டும். எனவே, கசப்பு நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.