காய்ச்சல், தலைவலி, உடல் வலி என எதுவாக இருந்தாலும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. ஆனால் வலி நிவாரணிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதமான அல்லது கடுமையான வலிக்கு பயன்படுத்தப்படும் ஓபியாய்டு (Opioid) மாத்திரைகள், மூளை, முதுகெலும்பு, இரைப்பை, குடல் உள்ளிட்ட உறுப்புகளில் உள்ள நரம்பு செல்கள் மீது ஓபிபாய்டு ஏற்பிகளுடன் பிணைப்பதன் மூலம் அவை வலி சமிக்ஞ்சைகளை தடுக்கின்றன. இதனால் வலி குறைகிறது. ஓபியம் பாப்பி என்ற தாவரத்தில் இருந்து இந்த வலி நிவாரணிகள் தயாரிக்கப்படுவதால் இவை உடலுக்கு போதை மயக்கத்தை கொடுக்கின்றன.