வருஷா வருஷம் சம்பளம் ஏறினாலும், மாசக் கடைசி ஆகும்போது நிறைய பேர் கையில காசு இல்லாம கஷ்டப்படுறாங்க. இதுக்கு காரணம் சம்பளம் கம்மியா இருக்குறது இல்ல, நம்மளோட பணப் பழக்கம்தான். கையில காசு நிக்கணும்னா, இந்த 5 தவறுகளையும் உடனே நிறுத்தணும்.
உங்க சம்பளம் உயர்ந்திருக்கா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்
சம்பள உயர்வு (Salary Hike) என்பது பல வருஷ உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். மாசக்கணக்கா பட்ஜெட் போட்டு, செலவுகளைக் குறைத்த பிறகு, கையில் கொஞ்சம் அதிகமாகப் பணம் வருவது பெரிய நிம்மதியா இருக்கும். இந்த நேரத்தில் புது கார், போன் வாங்கணும்னு தோணும். இப்படி வருமானம் கூடும்போது, பலரும் செலவுகளையும் அதிகரித்துவிடுகிறார்கள். ஒரு வருஷம் கழித்துப் பார்த்தால், ஏன் பணம் மிச்சமாகவில்லை என்று ஆச்சரியப்படுவார்கள். உங்களுக்கு சமீபத்தில் சம்பளம் உயர்ந்திருக்கா? அப்போ உங்க கையில் பணம் தங்க வேண்டுமென்றால், செய்யவே கூடாத சில விஷயங்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
25
அதிகரித்த சம்பளத்தை புத்திசாலித்தனமாக கையாளுங்கள்
உங்க சம்பளம் ஒரு ரூ.15,000 உயர்ந்திருக்குனு வச்சுக்கலாம். அதாவது, மாசாமாசம் உங்க கைக்கு ரூ.15,000 அதிகமா வரும். ஆனா, நிறைய பேர் இப்படி வர்ற பணத்தை அதிக வீட்டு வாடகை, வெளியில சாப்பிடுறது, ஷாப்பிங்னு ஈசியா செலவு பண்ணிடுறாங்க. கொஞ்ச நாள்லயே, பழைய சம்பளத்துல இருந்த அதே பணக்கஷ்டம் மறுபடியும் வந்துடும். செலவுகளை ஒரேடியா அதிகரிக்காம, அந்ததொகையை பிரிச்சுக்கோங்க. கொஞ்சம் முதலீடு பண்ணுங்க, இன்னும் கொஞ்சம் அவசர கால நிதிக்கு (Emergency Fund) மாத்துங்க. மீதி பணத்தை உங்க தேவைகளுக்கு பயன்படுத்துங்க. இப்படி செஞ்சா, எதிர்காலத்தை பாதிக்காம வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்.
35
ஆடம்பரம் வேண்டாம்.. சேமிப்பே முக்கியம்
சம்பளம் கூடும்போது வீடு கட்டுறது, ஓய்வுக்கால நிதி, பிள்ளைகள் படிப்புனு பணம் சேமிக்கிறது சுலபம். ஆனா பலரும், அதிகரிச்ச பணத்தை அன்றாட செலவுகளுக்கே பயன்படுத்தி, இந்த இலக்குகளை தள்ளிப் போடுறாங்க. இதை தவிர்க்க ஒரு சுலபமான வழி இருக்கு. சம்பளம் உயர்ந்த உடனேயே, உங்க SIP அல்லது மற்ற முதலீடுகளை அதிகப்படுத்துறதுதான். நீங்க பணத்தை செலவு செய்ய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அதை முதலீடு செஞ்சிட்டா, அப்புறமா அந்தப் பணம் இல்லாத உணர்வே இருக்காது.
சம்பளம் உயர்ந்ததாலேயே நீங்க நிதி ரீதியா பாதுகாப்பா இருக்கீங்கனு அர்த்தம் இல்ல. நாளைக்கு உங்க வேலை போயிட்டா, மாதாந்திர EMI, மற்ற வீட்டுச் செலவுகளை சமாளிக்க முடியாம போகலாம். அப்படிப்பட்ட நேரத்துல ஒரு அவசர கால நிதி (Emergency Fund) இருந்தா ரொம்ப தைரியமா இருக்கும். சம்பள உயர்வை மற்ற செலவுகளுக்கு பயன்படுத்துறதுக்கு முன்னாடி, அவசர கால நிதியை உருவாக்கப் பயன்படுத்துங்க. ஆறு முதல் பன்னிரண்டு மாத வாழ்க்கைச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை ஒதுக்கி வைப்பது நல்லது.
55
தகுதி இருந்தாலும் தேவையில்லாத கடன்கள் வேண்டாம்
உங்க வருமானம் கூடும்போது, பெரிய வீட்டுக்கடன், கார் லோன் அல்லது தனிநபர் கடனுக்கு (Personal Loan) தகுதி கிடைக்கலாம். அதுக்காக அதிகமா கடன் வாங்கணும்னு அர்த்தம் இல்ல. வங்கி நிறைய கடன் கொடுக்கத் தயாரா இருக்குறதால, அதை சுலபமா திருப்பிச் செலுத்திடலாம்னு நினைக்கிறது தவறு. பெரிய EMI உங்க சேமிப்பு, முதலீடுகளை பாதிக்கும். கடன் வாங்கி ஒரு பொருளை வாங்குறதுக்கு முன்னாடி, அந்தப் பொருள் உங்களுக்கு உண்மையிலேயே தேவையான்னு உங்கள நீங்களே கேட்டுக்கோங்க. வருமானம் கூடும்போது நிதிப் பொறுப்புகளும் கூடும். சம்பள உயர்வு என்பது உங்க மாதாந்திர பட்ஜெட்டை மட்டும் இல்ல, உங்க ஒட்டுமொத்த நிதித் திட்டத்தையும் (Financial Plan) மறுபரிசீலனை செய்யணும்னு ஞாபகப்படுத்துது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.