Eyes Shuttering: இடது கண் நரம்பு துடிப்பது நல்லதா..? கெட்டதா..? ஆயுர்வேதம் உணர்த்தும் சுவாரஸ்ய தகவல்..

First Published Aug 17, 2022, 1:26 PM IST

Eyes Shuttering: உண்மையில் கண் துடிப்பது எதனால், அதன் சிகிக்சை முறை என்ன என்பதை, ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் குறிப்பின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

eyes

பொதுவாக கண்கள் துடிப்பது பல வகையான பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, வலது கண் துடித்தால் பணம் கொட்டோ கொடுன்னு கொட்டும். இடது கண் துடித்தால் பல்வேறு தீமைகள் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை..? உண்மையில் கண் துடிப்பது எதனால் என்பதை ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் குறிப்பின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க...உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்கவே கூடாத 5 பொருட்கள்..மீறினால் உங்கள் கெட்ட நேரத்தை யாராலும் தடுக்க முடியாது..

eyes

கண் இமை துடிப்பதற்கு முக்கிய காரணம்?

உண்மையில் கண் துடிப்பது அது அபச குணம் அல்ல. மாறாக இதற்கு காரணமாக இருப்பது, மன அழுத்தம், அதிக அளவுகுடி பழக்கம், புகை பிடித்தல், தலைசுற்றுவது, மது அருந்துதல், தூக்கம் கெடுதல் அல்லது போதுமான தூக்கமின்மை, கண் வறட்சி ஆகியவை தான் கண் துடிப்புக்கு முக்கிய காரணம்.  

eyes

ஆயுர்வேதத்தின் படி இடது கண் இமை துடிப்பதற்கு முக்கிய காரணம்

1. துடிப்பு நரம்பினுடைய பலவீனத்தைக் காட்டுகிறது. மூளையில் ஏற்படும் பயம் கலந்த சோர்வு,  காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தம், நீரழிவு நோய், வாயு- பித்த தோஷம், குடலில் ஏற்படும் மலக்கட்டு, போதிய தண்ணீர் பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பது, வாயுவின் சீற்றம், நேரம் தவறி உணவை உண்ணுதல் போன்ற உபாதையுள்ளவர்களுக்கு நரம்பு பலவீனமானது எளிதில் உடலில் தென்படும். 

மேலும் படிக்க...உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்கவே கூடாத 5 பொருட்கள்..மீறினால் உங்கள் கெட்ட நேரத்தை யாராலும் தடுக்க முடியாது..

eyes

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை..?

1. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறைகளை மேற்கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம். இதற்கு நீங்கள் நெய், பால், மாமிஸ வகை உணவுகள், பருப்புகள், தானியங்கள் போன்றவை நிறைத்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். 

2. நரம்புகளை பலவீனப்படுத்தும் வாயுவின் குணங்களை மாற்றி அமைத்து வலுவைக் கூட்டும் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்துகளாகிய, தாடிமாதி கிருதம், இந்துகாந்தம் கிருதம், விதார்யாதி கிருதம், கல்யாணக கிருதம் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி, சிறிய அளவில் காலை, மதியம், இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் தரும். 

EYES

3. நெய் மருந்தைச் சாப்பிட்ட பிறகு, சிறிது வென்னீர் அருந்தினால், நெய் மருந்தானது உருகி, அதிலுள்ள மூலிகைப் பொருட்கள் விடுபட்டு, விரைவில் செரித்து, நரம்புகளைச் சென்றடைந்து துடிப்பை மாற்றி, சுறுசுறுப்பை ஏற்படுத்தித் தரும். 

4. அஸ்வகந்தா சூரணத்தை, ஐந்து கிராம் எடுத்து, 10 மி.லி. தேன் குழைத்து, இரவில் படுக்கும் முன் சாப்பிட உகந்த மருந்தாகும். 

5. கண்களை மூடிக்கொண்டு குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரை மாறி, மாறி இமைகள் மேல் அடித்துக்கொள்ளலாம். இதற்கு ஹைட்ரோதெரபி என்ற பெயர் சொல்லி அழைக்கப்படுகிறது. வெதுவெதுப்பான நீர்படும்போது இரத்தநாளங்கள் விரிவடையும். அதன்மூலம் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க...உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்கவே கூடாத 5 பொருட்கள்..மீறினால் உங்கள் கெட்ட நேரத்தை யாராலும் தடுக்க முடியாது..

6. கண்கள் துடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால் முதலில், நீங்கள் நன்றாக தூங்க வேண்டும். மேற்கூறிய விஷயங்களையும் பின்பற்றி உங்கள் கண் இமை துடிப்பது நிறுத்தவில்லை என்றால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிக்சை பெறுவது அவசியம்.

click me!