உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்கவே கூடாத 5 பொருட்கள்..மீறினால் நடக்கும் விபரீதத்தை யாராலும் தடுக்க முடியாது..

First Published Aug 17, 2022, 12:24 PM IST

Vastu Tips: சில பொருட்களை நாம் வீட்டில் வைத்திருக்கும் போது, அது நமக்கு மகாலட்சுமி யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும். அதேபோன்று, சில பொருட்களை வீட்டில் வைத்திருக்கும் போது, பண கஷ்டம் வர வாய்ப்பு உள்ளது.

Vastu Tip

சில பொருட்களை நாம் வீட்டில் வைத்திருக்கும் போது, அது நமக்கு மகாலட்சுமி யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும். அதேபோன்று, சில பொருட்களை வீட்டில் வைத்திருக்கும் போது, பண கஷ்டம் வர வாய்ப்பு உள்ளது. அதாவது இந்த பொருட்களை வீட்டில் கொண்டு வந்து வைக்காத முன்பு, ஒரு வீட்டினுடைய பொருளாதாரம், சீராக இருந்திருக்கும். பணத்தை அதிகமாக சேமிக்க முடியவில்லை என்றாலும், தேவைக்கு ஏற்ப பணம் வருவதும் போவதுமாக இருந்திருக்கும். ஆனால் இந்த பொருட்களை வீட்டில் இருக்கும் போது சில பேருக்கு  கெட்ட நேரம் ஆரம்பம் ஆகும். எனவே, உங்களுக்கு பண கஷ்டம் வராமல், நேர்மறை எண்ணங்களை கொடுப்பதற்கு எந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க கூடாது என்பதை வாஸ்து சாஸ்திரம் கூற்றுப்படி நாம் தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க ...Krishna Jayanthi Special Recipes: கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெயைத் வீட்டிலேயே சுலபமாக தயார் செய்வது எப்படி..?

Vastu Tip

ஓடாத கடிகாரம்:
 
முதலாவதாக வீட்டில் ஓடாத கடிகாரம் வைத்திருக்கக் கூடாது.  ஓடாத கடிகாரம் வீட்டில் இருந்தால் அது எதிர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும். இதனால் நிறைய கடன் பிரச்சினைகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். எனவே, கடிகாரத்தை சரி செய்ய முடியவில்லை என்றால், ஓடாத கடிகாரத்தை வீட்டில் அழகு பொருளாக மாற்றி வைக்க கூடாது. அதனை அப்புற படுத்துவது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

Vastu Tip

பூக்களை தலைகீழாக தொங்க வைக்க கூடாது:

உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது உங்கள் வீட்டிற்கு உள்ளேயும், அழகிற்காக கூட தலையைக் கீழே தொங்க வைத்து இருப்பது போல, கீழ்ப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் பூக்களை அழகிற்காக கூட வளர்க்கக்கூடாது. இப்படிப்பட்ட பூக்கள், அதாவது தலை கவிழ்ந்து சோகமாக இருக்கக் கூடிய பூக்களானது உங்கள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை பரவும். இதற்கு பதிலாக நீங்கள் ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில், தண்ணீர் நிரப்பி அதன் உள்ளே வெற்றிலையை காம்போடு மூழ்க வைத்து, வரவேற்பறையில் வைத்திருந்தால் பார்ப்பவர்களுடைய கண்கள், வெளிப்படுத்தும் பொறாமை, கண்திருஷ்டி இருந்தாலும் அது, நம்மை விட்டு நீங்கும். 

மேலும் படிக்க ...Krishna Jayanthi Special Recipes: கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெயைத் வீட்டிலேயே சுலபமாக தயார் செய்வது எப்படி..?

vastu tips

காய்ந்த செடிகள்:

உங்கள் வீட்டில் நீங்கள் ஆசையாக வாங்கி வைக்கும் செடி துளிர்விடாமல் காய்ந்து போய் விட்டால் அதனை அப்படியே வைத்திருக்காமல் அப்புறப்படுத்திவிடுவது நல்லது.இல்லையென்றால் அது வீட்டை சுற்றிலும் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். இதனால் நிறைய தொழில் பிரச்சினைகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.

உடைந்த கண்ணாடி:

 நம் வீட்டில் உடைந்த கண்ணாடி வைத்திருக்க கூடாது. இவை வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும். வருமானத்தில் தடையும், சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கும். முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தால் அது வீட்டில் வைத்திருப்பது அவ்வளவு நல்லது அல்ல. அதேபோன்று, பூஜை அறை, சமையல் அறை, வீட்டின் ஜன்னல் கதவுகள் உள்ளிட்ட எந்த இடத்தில்  உடைந்த கண்ணாடி அல்லது விரிசல் இருந்தால் உடனே அதனை அப்புறப்படுத்திவிட வேண்டும். எனவே, கண்ணாடி எந்த வகையில் உடைந்து வீட்டில் இருந்தாலும் அதனை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். அதேபோன்று, உடைந்த கண்ணாடி வளையல்கள் கூட பெண்கள் கையில் அணிந்து இருக்கக் கூடாது.  

துருப்பிடித்த இரும்பு:
 

உங்களிடம் இருக்கும் இரும்பு பொருட்கள் துருப்பிடித்து இருந்தால் அதை உடனடியாக சரி செய்துவிட வேண்டும். அவற்றை அப்படியே மூலையிலும், பரண் மேலும் போட்டு வைப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும். மேலும், வீட்டில் பல்வேறு பிரச்சனைகள், பண கஷ்டம் ஏற்படும். அதை தூக்கியாவது போட்டு விட வேண்டும். எனவே, இரும்பு பொருட்கள் துருப்பிடிக்காமல் இருக்க அதில் கரித்துண்டு, சாக்பீஸ் போட்டு வைக்கலாம்.  

 மேலும் படிக்க ...Krishna Jayanthi Special Recipes: கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெயைத் வீட்டிலேயே சுலபமாக தயார் செய்வது எப்படி..?

click me!