Indian Temples : ஏன் இந்த கோயில்கள்ல மட்டும் மக்கள் செருப்பு போட்டுட்டு போறாங்க?

Published : Sep 02, 2026, 11:37 AM IST

Indian Temples : பொதுவாகக் கோயில்களில் செருப்பு தடை என்றாலும், உத்தரகண்டின் கூர் தேவதா கோயில் மற்றும் கேரளாவின் சில தலங்களில் பக்தர்கள் செருப்பு அணிந்தே வழிபடும் மரபு உள்ளது.

PREV
14
செருப்புகளுடன் தரிசனம்!

பொதுவாக கோயிலுக்குச் சென்றால் செருப்பைக் கழட்டுவதுதான் வழக்கம். ஆனால், நம் நாட்டில் சில கோயில்களில் செருப்பு அணிந்தபடியே உள்ளே அனுமதிக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. அனைத்துக் கோயில்களிலும் இல்லாத இந்த விதி அங்கு மட்டும் பின்பற்றுவதற்கான காரணத்தை இப்போது பார்ப்போம்.

இதையும் படிங்க : Sadayaga Yoga : ஏழரை சனியிலிருந்து தப்பி கோடிகளைக் குவிக்கப் போகும் 2 ராசிகள்! சடயாக யோகத்தால் இனி டாப் கிளாஸ் வாழ்க்கை!

24
மத்தியப் பிரதேச மாலாஜ்பூர் தேவ்ஜி மகாராஜ் கோயில்

இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின்போது பக்தர்கள் செருப்பு அணிந்தே கோயில் வளாகத்திற்குள் செல்வர் (வழக்கமான தினசரி பூஜைகளில் அனுமதி இல்லை). தீய சக்திகள், செய்வினை மற்றும் உடல் அல்லது மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தேவ்ஜி மகாராஜை தரிசித்தால் அதிலிருந்து விடுதலை பெறுவர் என்று நம்பப்படுகிறது. செருப்புடன் நடப்பதன் மூலம் தங்களைப் பிடித்திருக்கும் தீய சக்திகள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க : Silver Jewellery : கறுத்துப்போன வெள்ளி நகைகளை 5 நிமிஷத்துல பளபளக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!

34
மத்தியப் பிரதேச போபால்பூர் காளி மாதா கோயில்

இங்கு பக்தர்கள் செருப்பைக் கழட்டாமல் அம்மனைத் தரிசிக்கலாம். இக்கோயிலின் அம்மன் மிகவும் உக்கிரமானவராகவும், அதேசமயம் பக்தர்களைக் கண்ணின் மணிபோல் காக்கும் தாயாகவும் கருதப்படுகிறார். பக்தர்கள் முள் பாதைகள் மற்றும் கடினமான வழிகளைக் கடந்து வருவதால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, அம்மனே செருப்புடன் வர அனுமதி வழங்கியதாக ஒரு நாட்டுப்புறக் கதை சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : Thick Curd : கெட்டித் தயிர் வேணுமா? இந்த ஒரு இலையை போடுங்க! பாட்டி காலத்து டெக்னிக்!

44
பூரி ஜெகந்நாதர் கோயிலில் செருப்பு அணியலாமா?

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயிலின் பிரதான கருவறைக்குள் செருப்பு அணிந்து செல்ல அனுமதியில்லை. இருப்பினும், கோயிலின் சமையலறை அதாவது மகாபிரசாதம் தயாராகும் இடம் மற்றும் சில குறிப்பிட்ட பூஜை வளாகங்களில் சேவகர்களும் பூசாரிகளும் மரத்தாலான பாதுகைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். பொதுவாக கோயில்களுக்குள் செருப்பு அனுமதிக்கப்படாததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதாவதாக சுத்தம், அதாவது வெளியில் இருந்து வரும் அழுக்கு மற்றும் கிருமிகள் கோயிலுக்குள் வராமல் தடுப்பது. இரண்டாவதாக ஆற்றல், அதாவது கோயிலில் உள்ள கல் தரை மற்றும் மந்திர உச்சரிப்புகளால் உருவாகும் நேர்மறை ஆற்றல் நமது கால்கள் வழியாக உடலுக்குள் செல்லும் என்ற நம்பிக்கை. அதனால்தான் கோயில்களில் செருப்பு அணியக் கூடாது என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க : Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் 40 வயதுக்கு பின் கோடீஸ்வரர் ஆவது உறுதி! உங்க பிறந்த தேதி இருக்கா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories