பட்டமளிப்பு விழாவில் டிகிரி பெற்ற பிறகு, மாணவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் தொப்பிகளை ஒரே நேரத்தில் வானத்தில் வீசுவதை நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். மகிழ்ச்சியில் பறக்கும் அந்தத் தொப்பிகளின் காட்சி பார்ப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கும். ஆனால் இந்த வழக்கம் எப்படி தொடங்கியது? இதற்குப் பின்னால் உள்ள உண்மையான கதை பல பேருக்குத் தெரியாது. டிகிரி முடித்த மகிழ்ச்சியைக் காட்டுவதற்காக இன்று உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் தொப்பிகளை வானத்தில் வீசுகின்றனர்.
எனினும், இந்தப் பழக்கத்தின் பின்னணியில் 114 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு மறைந்துள்ளது. இந்தச் பாரம்பரியம் 1912 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் நேவல் அகாடமியில் (United States Naval Academy) தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அங்கே கல்வி முடித்த மாணவர்கள் தொப்பிகளை அணிந்திருப்பார்கள். ஆனால் 1912 இல் புதிதாக அதிகாரிகளாக மாறப்போகும் நபர்களுக்குப் பிரத்யேகமான தொப்பிகள் வழங்கப்பட்டன. இதனால் பழைய தொப்பிகளின் தேவை இல்லாமல் போனது.
தங்களது கல்வி முடிந்துவிட்ட என்ற மகிழ்ச்சியிலும், புதிய வாழ்க்கைக்குள் கால்பதிக்கிறோம் என்ற உற்சாகத்திலும் மாணவர்கள் தங்களது பழைய தொப்பிகளை வானத்தில் வீசினர். அந்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்ததால், படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் அதே செயலைச் செய்யத் தொடங்கினர்.
இதையும் படிங்க : குளித்த உடனே பாத்ரூம் கதவை ஏன் திறந்து வைக்க வேண்டும்? பலருக்கும் தெரியாத காரணம்!