விப்ரோவின் 77 வயதான அசிம் பிரேம்ஜி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்கொடை வழங்குவதில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து, 2022 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவர் தனது அறக்கட்டளை மூலம் ரூ. 484 கோடி வழங்கியுள்ளார்.
நிதியாண்டு 2020 மற்றும் நிதியாண்டு 2021-ல், பிரேம்ஜி மிகவும் தாராளமாக நன்கொடை வழங்கி முதல் இந்தியராக உருவெடுத்தார். நிதியாண்டு 2020- இல், அவர் ஒரு நாளைக்கு ரூ. 22 கோடி அல்லது ரூ. 7,904 கோடி நன்கொடை அளித்தார். மேலும் 2021 நிதியாண்டில், பிரேம்ஜி ரூ.9,713 கோடி அல்லது ஒரு நாளைக்கு ரூ.27 கோடி நன்கொடை அளித்தார்.
கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது, "சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை சமாளிக்க விப்ரோ ரூ. 1,125 கோடி வழங்கி இருந்தது. ரூ. 1,125 கோடியில், விப்ரோ லிமிடெட்டின் அர்ப்பணிப்பு ரூ. 100 கோடி, விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் ரூ. 25 கோடி மற்றும் அஸிம். பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,000 கோடி வழங்கி இருந்தது.
2019 ஆம் ஆண்டில், பிரேம்ஜி தனது ஐடி அவுட்சோர்சிங் நிறுவனத்தில் 7.6 பில்லியன் டாலர் பங்குகளை தனது தொண்டு நிறுவனமான அசிம் பிரேம்ஜி அறக்கட்டளைக்கு வழங்கி வரலாறு படைத்தார். கொல்கத்தா தெருக்களில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு தங்குமிடம் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் பழங்குடியினப் பகுதிகளில் வசிக்கும் சமூகங்களுக்கு சேவை செய்து வருகிறார். இதேபோன்று விளிம்பு நிலை மக்களுக்கு அசிம் பிரேம்ஜி பெரிய அளவில் உதவி வருகிறார்.