அப்படியான, இனிமையான பயணத்தின் போது குழந்தைகள் பல குறும்புகளை செய்வதுண்டு. குழந்தைகள் காரில், பயணம் மேற்கொள்ளும் போது ஜன்னலுக்கு வெளியே பார்க்க முயற்சி செய்கிறார்கள். ஜன்னல் கண்ணாடிகளை மீண்டும் மீண்டும் திறந்து மூடுகிறார்கள்.
குழந்தைகளுடன் காரில் பயணம் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
1. குழந்தைகள் கார் இருக்கை பயன்படுத்துவது அவசியம்.
2. குழந்தை கார் இருக்கையில் இருக்கும் போது காயமடைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சீட் ஹார்னஸ் ஸ்ட்ராப்கள் குழந்தைக்கு வசதியாக பொருந்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
3. காரில் இருந்த குழந்தைகள் ஜன்னலுக்கு வெளியே கைகளை வைத்து கதவை திறக்க முயல்கின்றனர். பொதுவாக இதுபோன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, காரில் குழந்தை பாதுகாப்பு பூட்டை பயன்படுத்தவும். இது விபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்.