சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் காலரா பரவும்.
முதலில் தோன்றும் முக்கிய அறிகுறிகள் என்ன..?
வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அதோடு ரத்த அழுத்தக் குறைவு, தாகம், கால் தசைப் பிடிப்புகள், சிறுநீரக செயலிழப்பு, மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
முக்கிய அறிகுறியாக நீரிழப்பு ஏற்படும். உடல் எடையில் 10% அல்லது அதற்கு மேலும் கூட நீரிழப்பு ஏற்படலாம்
மேலும் படிக்க....காலரா நோய் பரவல்.. மறு உத்தரவு வரும் வரை 144 தடை அமல்..!
அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொண்ட 12 மணி முதல் ஐந்து நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றும் என்கின்றனர் மருத்துவர்கள். உதடுகள் , கை , கால் தோல்கள் வறண்டு சுருக்கத்தோடு காணப்படும்.