1.ஆரஞ்சில் நார்ச்சத்து நிறைந்துள்ளது
இது உங்களை முழுமையாக உணர வைக்க உதவுகிறது. உங்கள் செரிமான அமைப்பை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது, ஆனால் ஆரஞ்சு சாற்றில் நார்ச்சத்து குறைவாகவே இருக்கும். நிபுணரின் கூற்றுப்படி, நீங்கள் ஒரு ஆரஞ்சு பழத்தை ஜூஸ் செய்யும்போது, நார்ச்சத்து அதிகமாக நீக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு கிளாஸ் தண்ணீர் மட்டுமே உங்களுக்கு மிச்சம் இருக்கும். நச்சுக்களை வெளியேற்ற மட்டுமே உதவுகிறது.
2. சர்க்கரை அதிகம்
பலர் ஆரஞ்சு பழங்களை ஜூஸ் செய்வதை விட, பாக்கெட் செய்த ஜூஸை வாங்கவே விரும்புவார்கள். சந்தையில் வாங்கும் ஆரஞ்சு ஜூஸ்களில் பெரும்பாலானவை சர்க்கரையுடன் நிரப்பப்பட்டிருக்கும். சுவையாக இருக்க வண்ணங்கள், ப்ரிசர்வேடிவ்கள் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் வீட்டிலேயே ஆரஞ்சு பழங்களை ஜூஸ் செய்தாலும், நீங்கள் 3-4 ஆரஞ்சுகளைப் பயன்படுத்துகிறீர்கள், இது ஒரு நாளைக்கு அதிக அளவு சர்க்கரை உட்கொள்ளலாக இருக்கலாம். சர்க்கரை அதிகம் சாப்பிடுபவர்களாக மாறிவிடுவோம். எனவே இதனால் நன்மையை விட.. தீமையே அதிகம்.