Vinayagar Chaturthi
அடுத்தபடியாக பூரணத்திற்கு மேல் மாவு தயார் செய்யலாம் வாருங்கள்.
1. முதலில் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
2. பிறகு அகலமான பாத்திரத்தை எடுத்து பச்சரிசி மாவை போட்டு சூடான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு கரண்டியை வைத்து மாவை நன்றாக கலந்து விடுங்கள்.
3. மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உங்கள் கையை வைத்து மாவை நன்றாக பிசைந்து, (சப்பாத்தி மாவு பிசைவதை போன்று) சிறு உருண்டையாக எடுத்து கொள்ளுங்கள்.
4. பிறகு, பிசைந்த மாவின் மேலே கொஞ்சமாக நெய்யை தடவி, ஒரு மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து விடுங்கள். பிறகு, தயாராக இருக்கும் மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
5. முதலில் தயாராக வைத்துள்ள புராணங்களையும் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
6. அதன் பின்னர், மாவின் உள்ளே இந்த பூரணத்தை வைத்து உங்களுக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவத்தில் கொழுக்கட்டையை செய்து இட்லி தட்டில் வைத்து மூடி விட்டு 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் போதும். பிள்ளையாருக்கு பிடித்த சூப்பரான பூரண கொழுக்கட்டைகள் தயார் ஆகிவிடும்.
மேலும் படிக்க...Budhan Peyarchi 2022: அக்டோபர் 2ல் புதன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன் உறுதி..உங்கள் ராசி என்ன.?