விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி..? இந்த 1 பொருள் சேர்த்தால் டேஸ்ட் செம்மையா இருக்கும்..

First Published Aug 24, 2022, 6:02 AM IST

Vinayagar Chaturthi special food in Tamil: விநாயகர் சதுர்த்தி நாளில் பிள்ளையாருக்கு பிடித்தமான பூரண கொழுக்கட்டையை, செம்ம டேஸ்ட்டாக செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

Vinayagar Chaturthi

விநாயகர் சதுர்த்தி நாளில் (ஆகஸ்ட் 31) நம்முடைய வீடுகளில் மற்ற உணவு வகைகளை செய்கிறோமோ, இல்லையோ கண்டிப்பாக, பூரணம் கொழுக்கட்டை செய்யாமல் இருக்கவே மாட்டோம். ஏனெனில், பிள்ளையாருக்கு பூரணம் கொழுக்கட்டை தான் முதல் நெய்வேத்தியமாக கட்டாயம் வைக்கப்படும். ஆனால், நீங்கள் எப்போதும் வழக்கம் போல் ஒரு மாதிரியான முறையில், பூரணம் கொழுக்கட்டை செய்யாமல், இந்த முறை சற்று வித்தியாசமான முறையில் இந்த ஒரு பொருளை கூட சேர்த்து செய்து பாருங்கள். செம்ம ருசியாக இருக்கும்.


மேலும் படிக்க...Budhan Peyarchi 2022: அக்டோபர் 2ல் புதன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன் உறுதி..உங்கள் ராசி என்ன.?

Vinayagar Chaturthi

கொழுக்கட்டை செய்வதற்கு முன்பு, பூரணம்  தயார் செய்து வைத்து கொள்ளுங்கள்.  

தேங்காய் -1 கப் அளவு 

வெல்லம் -1 கப் அளவு 

நெய் 1 டீஸ்புன் 

செய்முறை:

முதலில் கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு அதனுடன் வெள்ளம் சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும். 

ஒரு 5 முதல் 10 நிமிடம் அப்படியே கிளறி கொண்டே இருந்தால், நல்ல கெட்டி பதம் வரும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு ஆற விட்டால்  பூரணம் தயார்.

மேலும் படிக்க...Budhan Peyarchi 2022: அக்டோபர் 2ல் புதன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன் உறுதி..உங்கள் ராசி என்ன.?

Vinayagar Chaturthi

அடுத்தபடியாக பூரணத்திற்கு மேல் மாவு தயார் செய்யலாம் வாருங்கள்.

1. முதலில் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள். 

2. பிறகு அகலமான  பாத்திரத்தை எடுத்து பச்சரிசி மாவை போட்டு சூடான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு கரண்டியை வைத்து மாவை நன்றாக கலந்து விடுங்கள்.

3. மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உங்கள் கையை வைத்து மாவை நன்றாக பிசைந்து, (சப்பாத்தி மாவு பிசைவதை போன்று)  சிறு உருண்டையாக எடுத்து கொள்ளுங்கள். 

4. பிறகு, பிசைந்த மாவின் மேலே கொஞ்சமாக நெய்யை தடவி, ஒரு மூடி போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து விடுங்கள். பிறகு, தயாராக இருக்கும் மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். 

5. முதலில் தயாராக வைத்துள்ள புராணங்களையும் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.  

6. அதன் பின்னர், மாவின் உள்ளே இந்த பூரணத்தை வைத்து உங்களுக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவத்தில் கொழுக்கட்டையை செய்து இட்லி தட்டில் வைத்து மூடி விட்டு 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் போதும். பிள்ளையாருக்கு பிடித்த சூப்பரான பூரண கொழுக்கட்டைகள் தயார் ஆகிவிடும்.

மேலும் படிக்க...Budhan Peyarchi 2022: அக்டோபர் 2ல் புதன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன் உறுதி..உங்கள் ராசி என்ன.?

click me!