துளசி செடியில் இருந்து இலைகளைப் பறிப்பதற்கும் சில முக்கிய விதிகள் உள்ளன. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளில் துளசி இலைகளைப் பறிக்கவே கூடாது; இது வீட்டில் தோஷத்தை உண்டாக்கும். அதேபோல், நகங்களால் கிள்ளாமல் விரல் நுனிகளால் மட்டுமே மென்மையாகப் பறிக்க வேண்டும். மொட்டை மாடியில் இருக்கும் துளசி செடி ஒருவேளை முற்றிலும் காய்ந்து போனால், அதை குப்பையில் தூக்கி எறியாமல், அருகில் உள்ள நீர்நிலைகளிலோ அல்லது நதிக்கரையிலோ போடுவதுதான் வீட்டிற்கு நல்லது.
துளசி செடி வளர்க்கும்போது இதை செய்யுங்கள்
மொட்டை மாடியில் துளசி செடி வளர்த்தால், அதை ஒரு உயரமான ஸ்டாண்ட் மீது வையுங்கள். இதனால் செடி நேரடியாக தரையைத் தொடாது. அதிக வெயில் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாக்க, ஒரு கூரைக்குக் கீழே செடியை வையுங்கள். மாலையில் தவறாமல் விளக்கேற்றுங்கள்.