அசைவ உணவு
முன்பெல்லாம் வீடுகளில் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும், கோயில் திருவிழாக்களிலும் மட்டுமே மட்டன், சிக்கன், மீன் போன்ற அசைவம் எடுப்பார்கள். ஆனால் இப்போது ஒவ்வொரு ஞாயிறுக்கிழமைகளும் நான்வெஜ் சாப்பிடாமல் நிறைவு பெறுவதில்லை. ஏனெனில் நான்வெஜ்களில் நமது உடலுக்கு தேவையான சத்துகள் இருப்பதும், நான்வெஜ்களுக்கு இணையாக காய்கறிகளின் விலையும் உச்சத்தில் இருப்பதே இதற்கு காரணம்.
இந்நிலையில், இந்தியாவில் அதிகம் நான்வெஜ் சாப்பிட்டும் முதல் 10 மாநிலங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
1.நாகாலாந்து
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நான்வெஜ் சாப்பிடுபவர்கள் அதிகமாக உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. அதாவது நாகாலாந்தில் 99.8% மக்கள் நான்வெஜ் விரும்பி சாப்பிடுகின்றனர்.
2.கொல்கத்தா
மேற்கு வங்க மாநிலத்தில் 99.3% பேர் நான்வெஜ் சாப்பிடுகின்றனர். மேற்கு வங்கம் மீன் குழம்பு மற்றும் மட்டன் கறிக்கு பேமஸ். கொல்கத்தா பிரியாணிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.