ஜோதிட சாஸ்திரப்படி, சனியின் மகாதசை 19 வருடங்கள் நீடிக்கும். சனி பலவீனமான லக்னத்தில் இருந்தாலும் அல்லது சூரியனுடன் சேர்ந்து இருந்தாலும், பொருளாதார ரீதியாக பல இழப்புகள் ஏற்படும். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.
இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும். சனி தேவன் 2022 ஜூலை 12 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்தார். இவர் வரும், ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார். இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை பார்ப்போம்.
25
Sani Peyarchi 2022 Palangal:
கடகம்:
கடக ராசிக்கு ஏழாம் வீட்டில் சனி சஞ்சரிக்கப் போகிறார்.இதனால், குறிப்பிட்ட ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வந்து சேரும். சனி அமாவாசை அன்று நதியில் நீராடினால் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். இத்துடன் அனைத்து துன்பங்களும், பிரச்சனைகளும், தடைகளும் நீங்கி விடும்.
35
Sani Peyarchi 2022 Palangal:
துலாம்:
துலாம் ராசிக்கு நான்காம் வீட்டில் சனி தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். இந்த காலகட்டத்தில்சில ராசிகளுக்கு வருமானம் உயரும். துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும்.
45
Sani Peyarchi 2022 Palangal:
விருச்சிகம்:
விருச்சிகம் ராசியில், இந்தக் காலத்தில் தொடங்குவது சரியாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மங்களகரமானது. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இப்போது செய்யலாம், நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
சனி பகவான் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பரிசாக அளிக்கப் போகிறார். மகர ராசியில் சனி இருப்பதால் மீன ராசிக்காரர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடுவார்கள். அதே நேரத்தில், நீங்கள் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.