Guru Peyarchi 2022 Palangal:
ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது, அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பெயர்ச்சி சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அதன்படி குரு அல்லது வியாழன் வக்ர நிலையில் இருப்பது ஜோதிடத்தில் பெரிய நிகழ்வாக கருதப்படுகின்றது. அந்தவகையில், கடந்த ஜூலை 29 அன்று குரு பகவான் வக்ரமானார். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டு வருகிறது. இதனால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய நான்கு ராசிக்காரர்கள் உள்ளனர். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க..Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி..குபேரனின் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?
Guru Peyarchi 2022 Palangal:
சிம்மம்:
குருவின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு கல்லீரல், சர்க்கரை நோய் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, இந்த நேரத்தில் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். இந்த நேரத்தில் சனி கிரகத்தின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
Guru Peyarchi 2022 Palangal:
துலாம்:
வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். இதனுடன் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். சனி பகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும். மேலும், வியாழன் கிரகம் தொடர்பான விஷயங்களையும் தானம் செய்ய வேண்டும்.