Rahu Ketu Peyarchi 2022: ராகு-கேது கிரகங்களின் மாற்றத்தால், ஒருவருக்கு சுப பலன்களும், ஒருவருக்கு அசுப பலன்களையும் தருகிறது. இதனால் யாருக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்.
ஜோதிடத்தின் பார்வையில், ராகு-கேது, நிழல் கிரகங்களாகவும் அசுபமான கிரகங்களாகக் கருதப்படுகிறது இது ஒருவருக்கு சுப மற்றும் அசுப பலன்களை தருகிறது. ராகு கேது பெயர்ச்சி சிலரின் வாழ்க்கையை வெற்றிகரமானதாக, மகிழ்ச்சிகரமானதாக மாற்றக் கூடியது.
அதே சமயம் ராகு, கேது ஒருவருக்கு அசுபமாக இருந்தால், அவர்களின் வாழ்க்கையே தலைகீழாய் மாறும். கேது கிரகம் தற்போது துலாம் ராசியில் அமர்ந்துள்ள நிலையில், 2023 வரை இந்த ராசியில் தங்கி இருக்கும். இவ்வாறு துலாம் ராசியில் இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் பிரச்சனையான காலகட்டமாக இது இருக்கும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
35
Rahu Ketu Peyarchi 2022:
மகரம்:
இந்த வருட இறுதியில் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடலாம். சொத்தில் முதலீடு செய்வீர்கள். ஆனால் அதில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உங்களுக்கு சொத்து இழப்பு ஏற்படலாம். வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்வதால் தொழிலில் நஷ்டம் ஏற்படும். எனவே அதிக பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
குடும்பத்தினருடன் சண்டை,சச்சரவுகள் வந்து போகும்.
45
Rahu Ketu Peyarchi 2022:
துலாம்:
இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் சச்சரவுகளை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். இந்த நேரத்தில், வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சி செய்வதைத் தவிர்க்கவும்.வீட்டில் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கும். வெளியில் கடன் வாங்க வேண்டி நிலை ஏற்படலாம். வெளியூர் பயணத்தை தவிர்க்கவும்.
இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு சருமம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் திடீர் பணத்தை இழக்க நேரிடலாம். பணியிடத்தில் சில நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படலாம். உங்களின் வாழ்வில் செல்வம் பெருகும். உங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது நிம்மதியான வாழ்வைத் தரும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.