Published : Aug 12, 2022, 01:14 PM ISTUpdated : Aug 12, 2022, 02:33 PM IST
Sevvai Peyarchi 2022 Palangal: ஆகஸ்ட் 10 அன்று செவ்வாய் தனது ராசியை மாற்றியது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டம் ஆரம்பம் ஆகியுள்ளது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
ஜோதிடத்தின் பார்வையில், புத்தி, பேச்சு, திருமணம், தைரியம் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் கிரகம் ஆகஸ்ட் 10 அன்று மேஷ ராசியில் தனது ராசியை மாற்றியது. இதையடுத்து, செவ்வாய் 2022 அக்டோபர் 14 வரை இந்த ராசியில் இருக்கும். செவ்வாயின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் மாற்றங்களை கொண்டு வரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகும். சில ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பமாகும். ஒருவரது, ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. அதன்படி, செவ்வாய் ராசி மாற்றத்தின் விளைவாக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டுமே பண மழை உண்டாகும். அப்படியாக, செவ்வாய் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலத்தில் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம் இதுவாகும். பழைய சச்சரவுகள் அகலும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
35
Sevvai Peyarchi 2022
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் பண வரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உண்டாகும். அதேபோல் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும்.
45
Sevvai Peyarchi 2022
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பழைய கடனில் இருந்து விடுபடலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் வலுவான வாய்ப்புகள் இருக்கும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உண்டாகும். அதேபோல் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும்.
கும்ப ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மேம்படும். இந்த காலகட்டத்தில், நீங்கள் சொத்து மற்றும் வாகனங்கள் வாங்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் கும்ப ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். உங்களுக்கு வெற்றி உண்டாகும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.