Sani peyarchi 2022: சனியின் வக்ர நிலை பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு மகத்தான வெற்றி, வாழ்வில் இன்பம் பெருகும்.!

First Published Oct 7, 2022, 3:46 PM IST

Sani peyarchi 2022 Palangal: சனியின் சஞ்சாரத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். அவை எந்த ராசிகள் என்பதை பார்ப்போம். 

வேத ஜோதிடத்தின் படி, சனி பகவான் அனைத்து கிரகங்களையும் விட மிக குறைவான வேகத்தில் பயணித்து இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகிறார்.  இந்த மாதம் சனி பகவான் தனது வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளார். சில ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மகிழ்ச்சி, செழிப்பு, மகிமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைத் தரப் போகிறது.

தற்போது, ​​சனி பகவான் தனது சொந்த ராசியான மகரத்தில் வக்ர நிலையில் உள்ளார். அக்டோபர் 23, 2022 முதல் இவரது நிலை மாறவுள்ளது. சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் வருமானம் அதிகரிப்பதோடு, வியாபாரத்திலும் வளர்ச்சி ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் இயக்க மாற்றத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அபரிமிதமான நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் அமையும். இந்த மாதம் அவர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். 

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

மகரம்:

மகர ராசியில் சனிபகவான் நேர் இயக்கத்துக்கு மாறுவதால், துலாம் ராசிக்காரர்களும் பலன் அடைவார்கள். இந்த காலகட்டத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் பாதை மாற்றம் சுபமாக இருக்கும். சனிபகவான் இந்த ராசிக்கு நன்மை செய்யும் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார்உங்களுக்கு இந்த நேரத்தில் வியாபாரத்தில் வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் அமையும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும்

click me!