ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் ராசி மாற்றம், மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சூரியன் வெற்றி, மரியாதை, தந்தை, குரு, ஆரோக்கியம் ஆகியவற்றின் காரண கிரகமாக கருதப்படுகிறார். அதன்படி, 11 மாதங்களுக்குப் பிறகு சூரிய பகவான் ஆகஸ்ட் 17 அன்று சிம்ம ராசியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். இதையடுத்து, ஒரு மாதம் இங்கேயே தங்கி இருப்பார். எனவே சூரியனின் ராசி மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, புதன் கிரகம் ஏற்கனவே சிம்ம ராசியில் தங்கி இருக்கிறார். இந்த கிரகங்களின் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி பலன் கொடுக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மனக் குழப்பம் உண்டாகும். எனவே இந்தக் காலக்கட்டத்தில் மிகவும் அமைதியான மனதுடன், சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
34
Suriyan Peyarchi 2022
மிதுனம்:
குடும்பத்திலும் அமைதி காக்க வேண்டும், சின்ன சின்ன விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் ஆட்சேபனை இருந்தால், மிகவும் பொறுமையாக மற்றவர் முன் உங்கள் தரப்பு விளக்கத்தை எடுத்து சொல்ல வேண்டும். பதற்றத்தை அதிகரிக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் காதல் கைக்கூடும்.
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் விவகாரங்களில் தோல்வி அடைந்து கொண்டிருந்தீர்கள், இனி காதலில் மோதலே இருக்காது. வியாபாரத்தில் தடைகள் அதிகரிக்கும். வணிக ரீதியிலான ஒரு பயணத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுக்கு பண வரத்து இருக்கும். இருப்பினும், எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.