Sani Peyarchi 2022 Palangal: ஜூலை மாதம் நிகழும் சனியின் பிற்போக்கு நகர்வு குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அப்படி எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூலை மாதத்தில் பலமுக்கிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றன. இதில் சனி பக்கவானும் ஒருவர். சனி பகவான் நீதி மற்றும் தண்டனையின் கடவுளாக கருதப்படுகிறார். அதன்படி வருகிற ஜூலை 12 அன்று, சனி பகவான் அதன் சொந்த ராசியான மகரத்தில் வக்ர நிலையில் வருவார். மேலும் மகர ராசியில் பெயர்ச்சிக்கு பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை சனி பகவான் இதே ராசியில் பயணிப்பார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதமே, சனி பகவான் தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழைந்து ஜூன் 5 ஆம் தேதி பிற்போக்குத்தனமாக மாறினார். அவர், அக்டோபர் 23 2022 வரை கும்பம் ராசியில் வக்ர நிலையில் இருப்பார். தற்போது மீண்டும் சனி தனது சொந்த ராசியான மகர ராசியில் ஜூலை 12 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைவார். எனவே சனி பகவானின் இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
துலாம் ராசி நபர்கள் ஜூலை 12ம் தேதி சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் நம்பப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் அவசியம். தொழில், வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். நீங்கள் இலக்கை அடைவதில் அதிக கவனமாக உழைக்க வேண்டாம். சிக்கல் ஏற்படும். கடன் சுமை கூடும். வாழ்வில் எச்சரிக்கை அவசியம், இல்லையெனில் எதிரிகள் வந்து தொல்லை கொடுப்பார்கள். ஆரோக்கியம் குறைபாடு ஏற்படும்.
45
sani peyarchi 2022
கும்பம்:
சனி பகவான் ஜூலை 12ம் தேதி வக்ர நிலையில் வருவார். இதனால், உங்களுக்கு ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கி விட்டது. நீங்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஒருவரின் ஜாதகத்தில் சனி பலவீனமான நிலையில் இருந்தால், வேதனைகள் அதிகரிக்கும். பிரச்சினைகள் சூழும். எனவே, எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
சனி பகவான் ஜூலை 12ம் தேதி வக்ர நிலையில் வருவார். இதனால், உங்களுக்கு ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கி விட்டது. நீங்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஒருவரின் ஜாதகத்தில் சனி பலவீனமான நிலையில் இருந்தால், வேதனைகள் அதிகரிக்கும். பிரச்சினைகள் சூழும். எனவே, எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.