பள்ளி படிப்பு மாற்றம் கல்லூரி:
1886 ஜூலை 30ஆம் தேதி பிறந்த முத்துலட்சுமியின், தந்தை நாராயணசாமி, தாயார் சந்திரம்மாள் ஆவார். சிறுவயதில் இருந்தே கல்வியில் அதிக ஆர்வம் கொண்ட முத்துலட்சுமி1902இல் மெட்ரிகுலேசன் தேர்வில் முதல் மாணவியாக வந்தார் .தொடர்ந்து, உயர்நிலைப் பள்ளி படிப்பை புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் உதவித் தொகையுடன் படித்து முடித்தார். அந்த காலக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தில் முத்துலட்சுமி மட்டும்தான் ஒரேயொரு மாணவி ஆவார்.
புதுக்கோட்டை மன்னர்தான் உதவியுடன் சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைத் துறையில், முத்துலட்சுமி சேர்ந்தார். கல்லூரி படிப்பின் போது பார்வைக் குறைபாடு ஏற்பட்டுக் கண்ணாடி அணிந்து கொண்டே படித்து முடித்தார். இருப்பினும், அறுவை சிகிச்சைப் பிரிவின் தேர்விலும் முதல் மாணவியாக வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.