ஐந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய குணங்கள்:
பணிவு & மரியாதை
குழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சியிலிருந்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய மிக முக்கியமான குணங்களில் ஒன்றுதான் பணி மற்றும் மரியாதை. பிறரிடம் அதுவும் குறிப்பாக வயது மூத்தவர்களிடம் எப்போதுமே கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். இது தவிர, பணிவான வார்த்தைகள், மன்னிக்கவும், நன்றி மற்றும் தயவுசெய்து என்ற எளிய நடைமுறையின் வார்த்தைகளை குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுப்பது அவசியம்.
பகிர்ந்தல்
பகிர்தல் பற்றி கண்டிப்பாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏனெனில் இந்த குணம் குழந்தைகளின் நட்பை வளர்க்கவும், சமூக சூழ்நிலைகளை சமாளிக்கவும் பெரிது உதவுகிறது. உதாரணமாக பொம்மைகள், ஸ்நாக்ஸ் அல்லது வேறு ஏதாவது பொருட்களை பகிர்ந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.