மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள்:
வீட்டில் எறும்புகள் படையெடுக்க ஆரம்பித்து விட்டால், உடனே அதன் துளைகளில் சிறிதளவே மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு விடுங்கள். அப்படி செய்தால், அந்த இடத்தில் எறும்புகள் வரவே வராது. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எழுமிச்சை சாறு:
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எழுமிச்சை சாறு எறும்புகளை கொல்லும் சிறந்த முறையாகும். எனவே, வீடு துடைக்கும் பொழுது இவற்றில் இருந்து ஒரு மூடி பயன்படுத்தினால் தரைப்பகுதியும் சுத்தமாக பளிச்சிடும். எறும்பும் வரவே வராது.