
உலர் பழங்களில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதில் பாதாமுக்கு தனி இடம் உண்டு. பாதாம் உண்பதால் வயிறு நிரம்பிய உணவு நீண்ட நேரம் இருக்கும். ஆகவே தான் உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிகின்றனர். வயிறு நிரம்பிய உணர்வு பசியை கட்டுப்படுத்த உதவும். பாதாமில் உள்ள ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவும். இளமையான தோற்றத்தை தக்க வைக்க பாதமின் ஊட்டச்சத்துகள் உதவும்.
பாதாம் சுவையை விரும்பாதவர்கள் மிகவும் குறைவு தான். குழந்தைகள் முதல் பெரியோர் வரை பாதாம் எல்லோருக்கும் நல்ல பலன்களை தரும். நாள்தோறும் பாதாம் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல் திறன் மேம்பாடு அடையும். இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும். பாதாமை குளிர்காலத்தில் அப்படியே உண்ணலாம்.
இதையும் படிங்க: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாமா? திராட்சையா? எதை சாப்பிட்டால் நல்லது?
ஆனால், வெயில் காலங்களில் இரவில் ஊற வைக்க வேண்டும். அதை தோலுரித்து காலை உண்பதே நல்லது. ஏனென்றால் ஆயுர்வேதத்தின்படி, பாதாம் வெப்பத்தை உருவாக்கும் உணவாகக் கருதப்படுகிறது. அதனை இரவில் ஊறவைப்பது, வெப்பத்தை குறைக்க உதவுகிறது.
வெயில் காலங்களில் பாதாமை ஊறவைத்து உண்பதற்கு ஒரு காரணம் இருப்பதை இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதை போலவே பாதாமை தோலுரித்து உண்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. அதிலும் குழந்தைகளும், பெரியவர்களும் கட்டாயம் தோலுரித்து தான் உண்ண வேண்டுமாம். அது ஏன் என இங்கு காணலாம்.
பாதாம் ஊட்டச்சத்துக்கள்:
பாதாமில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் தலைமுடி, தோல் ஊட்டம் பெறும். பாதாம் தோலில் நார்ச்சத்து உள்ளது. அதுவும் நல்ல பலன்களை கொடுக்கும்.
இதையும் படிங்க: பாதாமை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் தெரியுமா..??
பாதாமை ஊறவைத்த பின்னர் அதனை தோலை நீக்கி உண்ண வேண்டும் என பழைய ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன. ஏனெனில் பாதாமை நீரில் ஊறவைத்த பின் அதில் டானின் என்ற பொருள் சேர்கிறது. அதை நீக்கிவிட்டு உண்பதால் பாதாமின் முழு ஆற்றலும் நம் உடலுக்கு கிடைக்கும் என பழைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் பாதாமை தோலுடன் உண்பதால் நன்மைகள் கிடைக்கும் என சொல்கிறது. பாதாம் தோலை நீக்காமல் உண்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இதனால் வைட்டமின் ஈ, நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கிறது.
ஏன் குழந்தைகள், பெரியவர்கள் தவிர்க்க வேண்டும்?
எல்லா வயதினருக்கும் ஒரே மாதிரியான செரிமான மண்டலம் இல்லை. ஒவ்வொருவரின் வயது, வாழ்க்கை முறை, சூழலுக்கு ஏற்ற மாதிரி செரிமானம் ஆகும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் செரிமான சற்று மந்தமாகத்தான் இருக்கும். இவர்கள் பாதாமை தோலுடன் உண்பதால் செரிமானத்திற்கு சிரமம் ஏற்படலாம்.
ஆகவே பாதாமை ஊறவைத்து தோலுரித்த பின் உண்ண வேண்டும். தோலுரித்த பாதாமாக இருந்தாலும் உடலுக்கு நல்லது தான். ஒருவேளை செரிமான பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் தோலுரிக்காமல் கூட பாதாமை யார் வேண்டுமானாலும் உண்ணலாம்.
பாதாமின் தோலுரிக்க பொதுவான காரணங்கள்:
பாதாமின் தோலில் அமிக்டலின் காணப்படுகிறது. இது கசப்பான சுவையைத் தரக்கூடியது. தோலுரிக்கும் போது இந்த கசப்பு சுவை நீங்கிவிடுகிறது. ஆகவே சாப்பிட இனிமையாக இருக்கும்.
பாதாமின் தோல் கடினமானது. இதனை சிலரால் ஜீரணிக்க முடியாது. தோலை உரித்தால் எளிதில் ஜீரணமாகும்.
பாதம் தோலில் பைடிக் என்ற அமிலம் காணப்படும். அது ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுக்கும். ஆகவே தோலை உரித்தால் பைடிக் அமிலம் குறையும். இதனால் வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதை ஊக்கப்படுத்தும். இதனால் பாதாமை தோலுரிக்க அறிவுறுத்தப்படுகிறது.
பாதாம் தோலுரித்தால் மென்மையாக இருக்கும். அதை உண்ணும்போது சுவையாக இருக்கும்.