
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தையை நல்ல முறையில் வளர்க்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் பெற்றோரின் தவறான வளர்ப்பு முறையால் குழந்தைகள் வளர வளர பிறரை அதிகமாக சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது. இப்படி இருப்பது எப்பேர்ப்பட்ட குழந்தையையும் கூட ஊனமாக்கிவிடும். இந்த பழக்கம் அவர்களது எதிர்காலத்தையும் சீர்குலைத்து விடும்.
இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளையை வளர்க்கும் போதே அவர்களது குழந்தை பருவத்தில் இருந்தே தன்னம்பிக்கைக்கான அனைத்து விஷயங்களையும் அவர்களுக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே, உங்கள் குழந்தையை நீங்கள் வளர்க்கும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கான 5 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: உங்க குழந்தை படிப்பில் எப்படினு தெரிஞ்சுக்கனுமா? அவங்க டீச்சர்ட இந்த '6' கேள்வி கேளுங்க!
குழந்தையை தன்னம்பிக்கையாக வளர்க்கும் 5 விஷயங்கள்:
1. அவர்கள் வேலையை அவர்களே செய்யட்டும்:
உங்கள் குழந்தை தன்னம்பிக்கை உடையவர்களாக மாறுவதற்கு முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்கள் வேலையை அவர்களை செய்ய பழக்கப்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் ஒவ்வொரு வேலையும் சரியாக செய்ய கற்றுக் கொள்வார்கள். மேலும் நீங்களும் அவர்கள் செய்யும் வேலையையும் கண்காணிக்க வேண்டும். உதாரணமாக வீட்டுப்பாடம் முடிப்பது, அவர்கள் காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டில் சரியான இடத்தில் வைப்பது, உணவை அவர்களை சாப்பிடுவது போன்றவை அடங்கும். இவை அனைத்தும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்வார்கள்.
2. சுய முடிவு எடுக்க பழக்கப்படுத்துங்கள்:
குழந்தைகளை வளர்க்கும் போது சுய முடிவுகளை எடுக்க அவர்களை பழக்கப்படுத்துவது மிகவும் அவசியம். மேலும் பெற்றோர்களாகிய நீங்களும் இதை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். அதாவது என்ன சாப்பிடலாம், என்ன படிக்கலாம் போன்றவை அடங்கும். முக்கியமாக அவர்கள் எடுக்கும் முடிவு நல்லதாக இருந்தால் அவர்களை பாராட்டுங்கள். ஒருவேளை தவறாக இருந்தால் அதை அன்பாக சுட்டிக்காட்டி திருத்தவும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்..
3. வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தவும்:
உங்களது குழந்தையை நீங்கள் சிறு வயது முதலே அவர்களை சின்ன சின்ன வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துங்கள். உதாரணமாக வீட்டை சுத்தம் செய்வது, சமைக்கும்போது உதவுவது போன்றவை ஆகும். முக்கியமாக குழந்தைகள் உங்களுக்கு வீட்டு வேலைகளில் உதவும் போது கண்டிப்பாக அவர்களை கண்காணிக்க வேண்டும். இப்படி உங்கள் குழந்தையை நீங்கள் பழக்கப்படுத்தும் போது, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதோடு மட்டுமின்றி அவர்களது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
4. தவறுகளை அன்பாக திருத்தவும்:
பல பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான். அதாவது குழந்தைகள் ஏதாவது தவறு செய்து விட்டால் உடனே அவர்கள் குழந்தையிடம் கோபத்தில் கத்துவார்கள் கத்துவார்கள் அல்லது அடிப்பார்கள். இப்படி செய்தால் குழந்தைகளுக்கு பய உணர்வு தான் ஏற்படுமே தவிர, தன்னம்பிக்கை வராது. எனவே உங்கள் குழந்தை ஏதாவது தவறு செய்தால் அவர்களை திட்டுவதற்கு பதிலாக நிதானமாக குழந்தையிடம் விளக்கவும். மேலும் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது எப்படி என்றும் சொல்லிக் கொடுங்கள்.
5. வெகுமதி வழங்குதல்:
கடினமாக உழைத்தால் வெற்றியை சுலபமாக அடைய முடியும் என்பதை குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள் இதன் மூலம் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதற்கு நீங்கள் சிறுவயதிலிருந்தே அவர்கள் ஏதாவது கடினமாக உழைத்தால், அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்காக ஏதாவது கிப்ட் வாங்கி கொடுங்கள்.
இதையும் படிங்க: குழந்தைங்க படித்ததும் மறக்கிறார்களா? ஈஸியா ஞாபகம் வச்சுக்க '5' சூப்பர் டிப்ஸ்