Purattasi perumal pooja: புரட்டாசி பொறந்தாச்சு..! இன்று பெருமாள் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க செய்ய வேண்டியவை

Published : Sep 18, 2022, 11:25 AM IST

Purattasi perumal pooja in Tamil: பெருமாளின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறுவதற்கு, இந்த நாளில் பூஜை, வழிபாட்டு முறைகளை எப்படி மேற்கொள்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

PREV
17
Purattasi perumal pooja: புரட்டாசி பொறந்தாச்சு..! இன்று பெருமாள் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க செய்ய வேண்டியவை

புரட்டாசி மாதம் 12 மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பொன் பொருளை அள்ளி தரும் இந்த  புரட்டாசி மாதத்தை மிகவும் சந்தோஷமாக நாம் வரவேற்போம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அப்படி, இந்த மாதத்தில் பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே, பெருமாளின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறுவதற்கு, இந்த நாளில் பூஜை வழிபாட்டு முறைகளை எப்படி மேற்கொள்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

 மேலும் படிக்க...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்., உங்கள் பாத்ரூமை எப்போதும் துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்க இந்த 1 பொருள் போதும்

27

இதற்கு முதலில், நீங்கள் குளித்து விட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி பெருமாள் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி,  உங்களுக்கு பிடித்த கற்கண்டு நெய்வேத்தியம் படைக்க வேண்டும். பெருமாளுக்கு கோடான கோடி நன்றிகளுடன் உங்களுடைய பூஜைகளை மாலை 6:00 மணிக்கு தொடங்குங்கள்.
 

37

பெருமாளுக்கு உச்சரிக்க வேண்டிய நாமம்..?

பெருமாளுக்கு மிகவும் உகந்த 'கோவிந்தா கோவிந்தா' என்ற நாமம் உச்சரிக்க வேண்டும். அதிலும் இந்த புரட்டாசி மாதத்தில் நம் வாயிலிருந்து வரும் கோவிந்தா என்ற நாமம் நமக்கு பல கோடி புண்ணியத்தை தேடித்தரும். அப்படி இல்லை என்றால் 'ஹரி ஹரி' என்ற நாமத்தை உச்சரிக்கலாம். தீபம் ஏற்றும் போது மட்டுமல்ல இந்த மாதம் முழுவதும் நாம் பெருமாளின் நாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தால், கோடான கோடி புண்ணியத்தை நாம் பெற முடியும்.

 மேலும் படிக்க...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்., உங்கள் பாத்ரூமை எப்போதும் துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்க இந்த 1 பொருள் போதும்

47

உங்கள் வீட்டில் பூஜை முடித்து விட்டு,பிறகு வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் விசேஷமான பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகங்களில் கலந்து கொள்ளுங்கள்.போகும் போது பெருமாளுக்கு பிடித்த வாசனை நிறைந்த பூவும் துளசி இலை மாலையும் வாங்கிச் செல்ல வேண்டும். பெருமாள் தரிசனத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

57

பெருமாள் கோவிலில் கட்டாயமாக தீர்த்தமும் துளசி இலையும் உங்கள் கையில் கொடுப்பார்கள். தீர்த்தத்தினை வீணாக்காமல் குடித்து விடுங்கள். துளசி இலைகளை பத்திரமாக வீட்டிற்கு கொண்டுவந்து உங்கள் பூஜை அறையில் இருக்கும் பெருமாளின் பாதங்களில் வைத்து எடுத்து, பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். 

 

 

67

குறிப்பாக சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள், சனிதோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி நடப்பவர்கள் அனைவரும் இன்றைய தினம் பெருமாள் வழிபாட்டை செய்ய வேண்டும். காக்கும் பகவானான விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள் அல்லவா இது. நம்மை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய விஷ்ணு பகவான் இன்றைய  தினம் மிக மிக பேரானந்தத்தில் இருப்பார். 

 

77

இந்த மாதம் முழுவதுமே பக்தர்களுக்கு பெருமாள், எந்த வரத்தைக் கேட்டாலும் உடனே கொடுத்து விடுபவராக இருக்கிறார். ஆகவே இன்றைய தினம் அனைவரது வீட்டிலும் பெருமாளை வழிபாடு செய்து நிறைவான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வைக்கும். 

 மேலும் படிக்க...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்., உங்கள் பாத்ரூமை எப்போதும் துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்க இந்த 1 பொருள் போதும்

click me!

Recommended Stories