பொங்கல் பானையில் பால் பொங்கி வரும் பொழுது அது எந்த திசையை நோக்கி வழிகிறது என்பதை வைத்து அந்த ஆண்டின் பலன்கள் கணிக்கப்படுகின்றன.
கிழக்கு: பொங்கல் பானையில் பொங்கல் கிழக்கு நோக்கி வழிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பால் கிழக்கு நோக்கி வழிந்தால் இந்த ஆண்டு உங்களுக்கு வீடு, நிலம் வாங்கும் யோகம் கைகூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
வடக்கு: பொங்கல் பானையில் பால் வடக்கு நோக்கி வழிவது பணவரவை குறிக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் பணவரவு தாராளமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும். குறைந்த ஊதியத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
மேற்கு: பொங்கல் பானையில் மேற்கு நோக்கி பால் வழிவது திருமண தடைகள் நீங்கி, சுப காரியங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் ஆகும். வெளிநாடு செல்வதற்கான யோகம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். வீட்டில் சுப செலவுகள் அதிகரிக்கும்.
தெற்கு: தெற்கு திசையில் பால் பொங்கினால் சற்றே கவனமாக இருக்க வேண்டிய அறிகுறியாக கருதப்படுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு சற்று திருமணம் தாமதமாகக் கூடும். தேவையற்ற அலைச்சல் மற்றும் சிறு மருத்துவ செலவுகள் வரலாம் என்பதால் இறை வழிபாடு அவசியம்.
கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் பொங்கல் வழிவது என்பது மகாலட்சுமி அருளும், பெரும் மங்கலமும் உண்டாவதைக் குறிக்கும்.