உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணையும் பண்டிகையாக பொங்கல் விழா உள்ளது. சாதி, மதம் வேறுபாடில்லாமல் கொண்டாடப்படும் பொங்கல் விழா, வடமாநிலங்களில் மகர சங்கராந்தி எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் குழந்தை பருவத்திலிருந்தே, ஜனவரி 14 ஆம் பொங்கல் விழாவை கொண்டாடியிருப்போம். இந்த முறை ஜனவரி 15ஆம் தேதி தான் பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நாள் மாற்றம் ஏன் என்று புரிந்து கொள்ள சின்ன நேர கணக்கீட்டு முறையை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.