
சில சமயங்களில் பெற்றோரின் நல்ல செயல்கள் கூட தற்செயலாக ஒரு குழந்தைக்கு உணர்வு ரீதியாக தீங்கு விளைவிக்கலாம். உங்களுக்கு தெரியாமலே நீங்கள் செய்யும் சில செயல்கள் குழந்தையின் சுயமரியாதை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். தங்களை அவமானப்படுவதாக குழந்தைகள் உணரலாம்.
இந்த தொடர்ச்சியான அனுபவங்கள் குழந்தைகளில் போதாமை மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவமானப்படுத்துவதையும் இந்த செயல்களை எவ்வாறு ஆக்கபூர்வமாக எதிர்கொள்வது என்பதையும் அறியாத சில பொதுவான நடத்தைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிகவும் பொதுவான மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தைகளில் ஒன்று உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவது. அது உடன்பிறந்தவராக இருந்தாலும் சரி, ஒரு வகுப்புத் தோழராக இருந்தாலும் சரி, அல்லது ஒரு நண்பரின் குழந்தையாக இருந்தாலும் சரி. வேறு எந்த குழந்தையுடனும் உங்கள் குழந்தையை ஒப்பிடாதீர்கள்.
ஆளுமை மற்றும் சமூக உளவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பெற்றோரால் மற்றவர்களுடன் அடிக்கடி ஒப்பிடப்படும் குழந்தைகள் குறைவான சுயமரியாதை உடனும் மற்றும் சமூக கவலையை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒப்பீடுகளுக்குப் பதிலாக, உங்கள் குழந்தையின் தனித்துவமான திறன்களை அங்கீகரித்து அதில் சிறப்பாக வளர அவர்களை ஊக்குவிக்கவும்.
குழந்தைகளின் உணர்ச்சிகள் பெரும்பாலும் தீவிரமானதாகவும், பெற்றோர்களால் நிர்வகிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். அவர்களின் உணர்வுகளை நிராகரிப்பது அல்லது செல்லாததாக்குவது அவர்களுக்கு நீங்கள் மதிப்பளிக்கவில்லை என்பதை உணர்த்தும். தங்கள் உணர்ச்சிகளை பெற்றோர்கள் மதிக்கவில்லை என்று குழந்தைகள் நினைக்கலாம்.
இதனால் இளமைப் பருவத்தில் உணர்ச்சி மற்றும் நடத்தை சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவர்களின் உணர்வுகளை ஒடுக்குவதற்கு பதிலாக, அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்லவும். குழந்தைகளிடம் பச்சாதாபத்தையும் புரிந்துணர்வையும் காட்ட வேண்டும்.
பெற்றோர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் தங்கள் குழந்தைகளின் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும். "நீங்கள் எப்போதும் மிகவும் சோம்பேறியாக இருக்கிறீர்கள்" அல்லது "ஏன் உங்களால் உங்கள் சகோதரியைப் போல் இருக்க முடியாது?" போன்ற சொற்றொடர்கள் குழந்தைகளிடம் எதிர்மறையான சுய உருவத்தை உள்வாங்க முடியும்.
குழந்தைகள் இந்த விளக்கங்களை உண்மைகளாக நம்புவதற்கு வழிவகுக்கும், இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய மதிப்புக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பெற்றோர்கள் நேர்மறை வலுவூட்டல் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனம் எதிர்மறை லேபிள்களை மாற்ற வேண்டும்.
சிக்கல்களைத் தீர்க்கும்போது நடத்தையில் கவனம் செலுத்துங்கள், உதாரணமாக, " உங்கள் அறையை அழுக்காக வைத்திருக்கிறீர்கள்" என்று கூறுவதற்குப் பதிலாக, "உங்கள் அறையை சுத்தமாக வைத்திருக்க ஒன்றாக வேலை செய்வோம்" என்று முயற்சி செய்யுங்கள்.
குழந்தைகள் நிபந்தனையின்றி நேசிக்கப்படுவதை உணர வேண்டும். அன்பு நிபந்தனைக்குட்பட்டதாக உணரப்படும்போது - நாம் ஏதாவது செய்தால் மட்டுமே நமக்கு அன்பு கிடைக்கும் என்று குழந்தைகள் நினைக்கக்கூடும். இது அவமானம் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தும். பெற்றோரின் அன்பைப் பெற வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகள் கவலை மற்றும் பரிபூரணப் போக்குகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அன்புக்கு தகுதியானவர்களாக உணர எப்போதும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயல்கின்றனர். உங்கள் பிள்ளையின் வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாமல், அவர்கள் மீதான உங்கள் அன்பு நிபந்தனையற்றது என்பதைக் காட்டுங்கள். இந்த உறுதியானது பாதுகாப்பான உணர்ச்சிபூர்வமான அடித்தளத்தை உருவாக்க உதவுகிறது.
குற்ற உணர்வு ஒரு சக்திவாய்ந்த உந்துசக்தியாக இருக்கலாம், ஆனால் உங்கள் குழந்தையின் நடத்தையை பாதிக்க அதை பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும். "உனக்காக நான் இவ்வளவு செய்த பிறகும், நீங்கள் ஏன் இப்படி இருக்கிறாய்? என்று கேட்பது தவறான அணுகுமுறை. பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் உணர்ச்சிகளுக்குப் பொறுப்பானவர்களாக உணரச் செய்யலாம், இது குற்ற உணர்வு மற்றும் அவமான உணர்வுக்கு வழிவகுக்கும்.
சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பெற்றோரால் அடிக்கடி குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் குழந்தைகள் ஆரோக்கியமற்ற சமாளிக்கும் வழிமுறைகளையும் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமலும் இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. அதற்குப் பதிலாக, உங்கள் உணர்வுகளைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லி, ஆரோக்கியமான உணர்வு பரிமாற்றத்தை உருவாக்கி, குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும்.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது அந்நியர்கள் முன்னிலையில் குழந்தைகளை கடுமையாக திட்டுவது அவர்களுக்கு ஆழ்ந்த அவமானத்தை ஏற்படுத்தும். குழந்தைகளை ற்றவர்கள் முன்னிலையில் திட்டினால், அது அவமானம் மற்றும் சங்கட உணர்வுகளுக்கு வழிவகுக்கும், இது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். பொது இடங்களில் அடிக்கடி கண்டிக்கப்படும் குழந்தைகள் சமூக கவலை மற்றும் விலகலை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே பொது இடத்தில் குழந்தைகளை திட்டாமல் வீட்டிற்கு சென்ற உடன் பொறுமையாக எடுத்து கூறுவது நல்லது. அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள நேரம் கொடுப்பதும் அவசியம். தங்கள் தவறை உணர்ந்தால் குழந்தைகள் திருந்துவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.