ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால்
குழந்தைகள் சிறந்த வளர்ச்சி, ஆரோக்கியத்தை அடைய, பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு பிரசவித்த பெண் தாய்ப்பால் கொடுக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. அதன் பின்புதான் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மற்ற உணவுகள் அளிக்கப்பட வேண்டும். இரண்டு வயது அல்லது அதற்கு மேல் குழந்தைகள் விரும்பும் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சில ஆய்வுகள் குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் என கூறுகின்றன. அதன் பிறகு தாய்ப்பாலுடன் வேறு சில உணவுகளையும் கொடுக்கலாம் என்று அது அறிவுறுத்துகிறது.