அதே சமயம் உட்கார்ந்து தண்ணீர் அருந்தினால் தசைகள், நரம்பு மண்டலம் ஓய்வெடுக்க வாய்ப்பாக அமையும். இதனால் உணவுகளை விரைவாக ஜீரணிக்க நரம்புகள் தூண்டப்படுகின்றன. நின்றபடி தண்ணீர் குடித்தால் உணவுக் குழாயின் கீழ் பகுதி பாதிக்கிறது. இது வயிற்றுக்கும், உணவுக்குழாய்க்கும் இடையே உள்ள பொதுவான ஸ்பிங்க்டரை பாதிக்கும். இது வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும்.
நின்றுகொண்டே தண்ணீர் குடித்தால், சிறுநீரகம் அந்த தண்ணீரைச் சரியாகச் சுத்தம் செய்யாதாம். இதனால் சிறுநீரகங்களில் அழுக்கு சேரத் தொடங்கும். இதன் காரணமாக சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலும், வலியும் உண்டாகும். ஆகவே எப்போதும் தண்ணீரை அமர்ந்த நிலையில் தான் அருந்த வேண்டும்.