மொஹரம் பண்டிகை:
இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை, தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களால், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.