Published : Aug 08, 2022, 11:59 AM ISTUpdated : Aug 08, 2022, 12:00 PM IST
Muharram Festival 2022: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான மொஹரம் பண்டிகை, தமிழ்நாட்டில் நாளை 09.08.2022 (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை, தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களால், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
25
Muharram Festival 2022
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள்
நடத்தப்படும். இந்த நாளில் புத்தாடை அணிந்து, உறவினர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை சமைத்து கொடுத்து மகிழ்வர்.
மொஹரம் வரலாறு 1443 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருப்பதாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்களில் ஷியா முஸ்லீம்கள் மற்றும் சன்னி முஸ்லிம்கள் ஆகிய இரண்டு வகை பிரிவினர் சில வேறுபட்ட காரணங்களுக்காக மொஹரம் தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.
ஷியா முஸ்லீம்கள் கி.பி 680 ஆஷுரா நாளில் கர்பாலா போரில் ஹஜ்ரத் அலியின் மகனும், முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை துக்க நாளாக மொஹரம் பண்டிகையை கடைப்பிடிக்கின்றனர். எனவே ஷியா முஸ்லிம்களுக்கு, இந்த தினத்தில் கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது. அவர்களுக்கு இது, துக்கம் மற்றும் பிரார்த்தனை சார்ந்த ஒரு மாதம் ஆகும்.
55
Muharram Festival 2022
சன்னி பிரிவினர் எகிப்திய அரசரை வெற்றி கொண்ட நாளாக இந்த திருநாளை கொண்டாடுகின்றனர். இவர்கள் இன்றைய தினத்தில் விரதம் இருந்து தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு "யா ஹுசைன்" அல்லது "யா அலி" என்று கோஷமிடுவர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.