உண்மையும் பொய்யும்: எது வெல்லும்? எது தோற்கும்? ஒரு சிறிய கதை!!

Published : Feb 07, 2025, 01:27 PM IST

பொய் அழகாகவும், உண்மை கடுமையானதாகவும் இருக்கும். இதை நாம் பல முறை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு சிறிய கதை உள்ளது. அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம்.

PREV
14
 உண்மையும் பொய்யும்: எது வெல்லும்? எது தோற்கும்? ஒரு சிறிய கதை!!
உண்மையும் பொய்யும்: எது வெல்லும்? எது தோற்கும்? ஒரு சிறிய கதை!!

பொய்யை அழகாகச் சொல்லலாம். ஆனால் உண்மையை அழகாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் உண்மை உண்மையாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், உண்மை மிகவும் கடுமையானது. அதனால்தான் பொய் கேட்கவும், பார்க்கவும் மிகவும் அழகாகத் தெரிகிறது. கேட்பதற்கும் ஆர்வமாக இருக்கும். கற்பனைக் கதையை போன்றதுதானே. உண்மையில் உருட்ட முடியாது. ஆனால், பொய்யில் என்ன வேண்டுமானாலும் உருட்டலாம். உண்மை, பொய் இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை அற்புதமாக விளக்கும் ஒரு கதையைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

24
உண்மையை ஏமாற்றும் பொய்

ஒருநாள் உண்மையும் பொய்யும் இரண்டும் நடந்து கொண்டிருந்தன. பொய், மாய வார்த்தைகளைச் சொல்லி, யாரையாவது ஏமாற்ற வேண்டுமா? எப்படி நம்ப வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது. ஆனால் உண்மை, உண்மையை மட்டுமே பேசுகிறது. ஏமாற்றும் பழக்கம் கொண்ட பொய், உண்மையையும் ஏமாற்ற முடிவு செய்கிறது. அப்படி நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு ஏரி வருகிறது. உடனே பொய், 'ரொம்ப சூடாக இருக்கு. இந்த ஏரியில் குளிப்போம்' என்று உண்மையிடம் சொல்கிறது.

34
துணைகளை இழந்த உண்மை

பொய்யின் சூழ்ச்சி தெரியாத உண்மை, தன் துணிகளைக் கழற்றிவிட்டு நீரில் இறங்குகிறது. ஆனால் பொய், நீரில் இறங்காமல் உண்மையின் துணிகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறது. அதன் பிறகு உண்மையின் துணிகளை அணிந்து பொய் வெளியே சுற்றத் தொடங்குகிறது. இதனால் அடுத்த நாள் முதல் பொய்யை மக்கள் விரும்பத் தொடங்குகிறார்கள். ஆனால் துணிகள் இல்லாமல் இருக்கும் உண்மையைப் பார்க்க விரும்பவில்லை. பொய்யையே உண்மையாக நம்பத் தொடங்குகிறார்கள். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு பொய்யின் உண்மையான முகம் வெளிப்படுகிறது. மக்களுக்கு உண்மை விஷயம் தெரிந்து, உண்மையின் பெருமையை உணர்கிறார்கள்.

44
இந்தக் கதை நமக்குக் கற்பிக்கும் நீதி

இந்தச் சிறிய கதை நமக்குச் சொல்லும் நீதி என்னவென்றால், உலகில் பலர் பொய்யை உண்மையாக நம்புகிறார்கள். ஆனால் உண்மையான உண்மை, அசைக்க முடியாமல் நிற்கும். சரியான நேரத்தில் வெளிப்படும். 

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories