Sani Peyarchi 2023 Palangal: நீதியின் கடவுளான சனி பகவான் பெயர்ச்சி, கிரங்களில் முக்கியமான ஒன்றாகும்..ஏனெனில், சனி பகவான் அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப பலன்களை தருபவர்..
ஜோதிடத்தின் பார்வையில், சனி பகவான் இவர் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகள் எடுத்து கொள்கிறார் .ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும்..ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனி பெயர்ச்சி காலத்தில் தங்கள் ராசியின் பலன்களை தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்வார்கள்..அந்த அளவிற்கு சனியில் கணிப்பு துல்லியமானது..
அப்படியாக, வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் சனி முறையாக மகரத்தில் இருந்து, கும்பத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மீனம் உள்ளிட்ட ராசிகளுக்கு சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனி ஆரம்பிக்கிறது. மகரம் உள்ளிட்ட சில ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள்.அப்படியாக உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்..
36
Sani Peyarchi 2023 Palangal:
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி 12ம் வீட்டில் நடக்கிறது. இதனால், உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். உங்களுக்கு திடீர் வருமானம் உண்டாகும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுவதும் கூடுதல் பலம். உங்களின் செல்வாக்கு உயரும். வெளியூர் பயணம் செல்லும் யோகம் வந்து சேரும்.
46
Sani Peyarchi 2023 Palangal:
ரிஷபம்:
சனி பகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நுழைகிறார். இந்த் நேரத்தில், நீங்கள் வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கூட்டுப்பணிகள் இந்த காலத்தில் நல்ல லாபத்தை தரும். இந்த நேரம் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் சாதகமானதாக இருக்கும். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
56
Sani Peyarchi 2023 Palangal:
துலாம்:
துலாம் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த உங்களுக்கு இனி நல்லது அதிகம் நடக்கும். சனி உங்களுடைய ராசிக்கு செல்வதை அள்ளி தர போகிறார். வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை நடைபெறும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகள் உண்டாகும். பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.
கன்னி ராசியில் சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் திடீர் பண வரவு உண்டாகும். கன்னி ராசியினரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வீடு, சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்கலாம். கன்னி ராசியில் இரண்டரை ஆண்டு காலம் யோகம் உண்டு. செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.