
இன்றைய காலத்தில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பலரும் பாதிக்கப்படுகின்றன. இதைக் குறைக்க பலர் பலவிதமான முயற்சிகளை முயற்சிகளில் ஈடுபடுவது மட்டுமின்றி, பல வகையான உணவுகளையும் எடுத்துக் கொள்கின்றன. உயரத்தை அழுத்தத்தால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் சரியான உணவு முறையை பின்பற்றினால் இதை சுலபமாக தவிர்க்கலாம்.
அந்த வகையில், பெரும்பாலானோர் அரிசி சாதம் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அரிசி சாதம் சாப்பிடலாமா? ஏனெனில், அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் உடல் எடை கூடும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று பலர் பயப்படுகிறார்கள். எனவே உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அரிசி சாப்பிடுவது நல்லதா? அவர்களுக்கு எந்த அரிசி சிறந்தது, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இங்கு காணலாம்.
இதையும் படிங்க:
உயர் ரத்த அழுத்தமுள்ளவர்கள் அரிசி சாப்பிடலாமா?
ஆம், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்தவித பயமுமின்றி தாராளமாக அரிசி சாப்பிடலாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. இதனால் உங்களது ஆரோக்கியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்வதற்கான ஆற்றலையும் இது உங்களுக்கு வழங்குகிறது.
எப்போது சாப்பிடக்கூடாது?
உங்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் நீங்கள் இரவு நேரத்தில் அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது நல்லதல்ல. இதனால் உங்களது எடை அதிகரிக்கும். எனவே முடிந்த வரை நீங்கள் பகலில் மட்டுமே அரிசி சாதம் சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: ரத்த அழுத்தம் எவ்வளவு இருந்தால் நார்மல்? எந்த அளவு ஆபத்தானது?
உயரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எந்த அரிசி நல்லது?
உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் அரிசி சாப்பிடுவது தான் நல்லது. ஏனெனில் அதில் தான் ஏராளமான தாதுக்கள், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளன. அவை உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தவிர, இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளை அரிசி சாப்பிட்டால் என்ன ஆகும்?
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளை அரிசி சாப்பிட்டால் அவர்களது குளுக்கோஸ் அளவு அதிகரித்து, ரத்த அழுத்தம் அதிகமாகும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளை அரிசி சாப்பிட வேண்டாம்.
உயர் ரத்த அழுத்தமுள்ளவர்கள் அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- அரிசியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது உங்களது வயிற்றுக்கு ரொம்பவே நல்லது குறிப்பாக செரிமான அமைப்பு நன்றாக இருக்கும். இது தவிர, உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
- அரிசியில் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் உயர் ரத்த அழுத்தமுள்ளவர்கள் தாராளமாக இதை சாப்பிடலாம். இது உயர்த்த அழுத்தத்தை இயல்பான நிலையில் வைக்கும்.
3. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களது உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். எனவே அரிசி வடித்த தண்ணீரை நீங்கள் குடித்தால் உங்களது உடல் நீரேற்றமாக இருக்கும். இதனால் உங்களுக்கு நீரிழப்பு பிரச்சனை ஏற்படாது.