எல்லா குடும்பத்தை போலவும் தான் ஜோஷி குடும்பத்திலும் நடந்தது. தன் பிள்ளை திருநங்கை என தெரிந்ததும் பெற்றோர் அவரை மாமா பொறுப்பில் விட்டுவிட்டனர். 10 வயதில் ஜோஷி பாலினத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டார். அவருடைய சொந்த மாமாவே நண்பர்களோடு சேர்ந்து நாஸியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த அவலம் நடந்தேறியது. இதனால் பலவீனமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குதான் மற்றொரு திருநங்கையை சந்தித்து உதவி பெற்றுள்ளார்.
அதன் பிறகு ஜோஷி தன் சொந்த அடையாளத்துடன் வாழ்க்கையை தொடங்கினார். பிழைப்புக்காக பிச்சை எடுக்கவும் நேரிட்டது. சில மசாஜ் சென்டர், பார்களிலும் வேலை கிடைத்தது. கிடைத்த பணத்தை வீணடிக்காமல் கல்வியில் முதலீடு செய்தார். எல்லா துயருக்கு மத்தியிலும் கல்வியின் கரங்களை இறுகப் பற்றி கொண்டார். பேஷன் டிசைனிங் படிப்பை படித்துமுடித்தார். படிப்பை முடித்த பின்னர் ஜோஷி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து தன்னை முழுவதுமாக மாற்றி கொண்டார்.
இதையும் படிங்க; ஐயப்ப பக்தர்கள் கருப்பு ஆடை அணிவது ஏன்? அதன் பின்னணி என்ன? முழு தகவல்கள்!