Cash Limit In Indian Railways : ரயில் பயணத்தில் எவ்வளவு பணம் எடுத்துச்செல்லாம்? லிமிட் இருக்கா?

First Published Sep 17, 2024, 7:49 PM IST

Cash Limit In Indian Railways : ரயிலில் நீங்கள் பயணிக்கும்போது உங்கள் வசம் எடுத்துச்செல்லும் பணத்திற்கு, குறிப்பிட்ட அளவு எதுவும் உள்ளதா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

Indian Railways

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான பயணிகள் நாடு முழுவதும் பயணம் செய்ய இந்திய ரயில்வேயைப் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 24 மில்லியன் பயணிகள் இந்திய ரயில்வேயை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்க, அதில் பயணம் செய்யும் பயணிகள், தங்கள்வசம் எடுத்துச்செல்லும் பணத்தின் அளவிற்கு எதாவது உச்சவரம்பு உள்ளதா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
 
இந்திய ரயில்வேயை பொறுத்தவரை நீங்கள் பயணம் செய்யும்போது, உங்கள்வசம் உள்ள பணத்திற்கு எந்த குறிப்பிட்ட அளவு நிர்ணயமும் கிடையாது. ஆனால்.. குறிப்பிட்ட தொகைக்கு மேல் நீங்கள் எடுத்துச்செல்லும்போது அதற்கென சில வழிமுறைகள் உள்ளது.

திருமணம் ஆனதும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்க இப்படியும் ஒரு காரணமா?

Cash limit in train travel

பொதுவாக ரயில் பயணத்தின்போது 50,000க்கு மேல் எடுத்துச் செல்லும் பயணிகள், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அல்லது வருமான வரி அதிகாரிகளின் சோதனைகளின் போது, ​​சட்ட அமலாக்க அல்லது ரயில்வே அதிகாரிகளால் விசாரிக்கப்படலாம். நீங்கள் அதிக அளவு பணத்தை எடுத்துச் சென்றால், அதற்கான சரியான ஆவணங்கள் அல்லது அந்த நிதிக்கான ஆதாரத்தை வைத்திருப்பது சிறந்தது. குறிப்பாக 50,000க்கு மேல் இருந்தால், கட்டாயம் ரசீதுகள், அல்லது வணிகம் தொடர்பான ஆவணங்கள் வைத்திருப்பது நல்லது. 

Latest Videos


Cash limit

நீங்கள் கணிசமான அளவு ரொக்கத்தை எடுத்துச் செல்லும்போது, பணமோசடி தடுப்பு விதிமுறைகளின்படி, நிதியின் ஆதாரம் மற்றும் நோக்கத்தை விளக்குவதற்கு தொடர்புடைய அடையாள மற்றும் ஆதார ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. இந்திய ரயில்வேயில் நீங்கள் இந்தியாவில் எடுத்துச் செல்லக்கூடிய அதிகபட்ச ரொக்கத் தொகை ரூ.50,000 ஆகும். இதற்கு மேல் எடுத்துச் சென்றால், ரயில்வே பாதுகாப்புப் படையிடம் (RPF) முறையான ஆவணங்களைச் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

Vande Bharath

நீங்கள் சமர்ப்பிக்கக்கூடிய சரியான ஆவணங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.. பணத்தின் மூலத்தைக் காட்டும் வங்கி அறிக்கை, பணத்தை வாங்கியதற்கான ரசீது மற்றும் வணிக நோக்கங்களுக்காக நீங்கள் பணத்தை எடுத்துச் செல்கிறீர்கள் என்று உங்கள் முதலாளியிடமிருந்து கடிதம் ஆகியவற்றை வைத்திருப்பது அவசியம். வருமான வரிச் சட்டம், 1961, கணக்கில் காட்டப்படாத பணப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த சில விதிகளைக் கொண்டுள்ளது. ஆவணங்கள் இல்லாமல் பெரிய தொகைகளை எடுத்துச் செல்வது இந்தச் சட்டங்களின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்வது நல்லதா? கெட்டதா? நிபுணர்கள் பதில்!

click me!