Purattasi Month:புரட்டாசி மாதத்தில் வீட்டில் விசேஷங்கள் நடத்தினால் பித்ரு தோஷம் வருமா? என்ன காரணம் தெரியுமா?

First Published Sep 22, 2022, 11:05 AM IST

Puratachi mathathil seiya kudathavai in tami: ஜோதிடத்தில் அசுபமாக கருதப்படும் பித்ரு தோஷம், ஒருவருக்கு வராமல் இருக்க புரட்டாசி மாதத்தில் இந்த விஷயங்களை மட்டும் தவறியும் செய்ய கூடாது.

Vastu tips for home:

வீட்டில் விசேஷங்கள் நடத்துவதற்கு முன்பு நாள், கிழமை பார்ப்பது வழக்கம். ஏனெனில், சில மாதம், நாட்களில் விஷேங்கள் நடத்தக் கூடாது. மீறினால், பாதிப்பு வந்து சேரும் என்பதற்காக தான். குறிப்பாக, அதில் ஆடி மாதம், மார்கழி மாதம், புரட்டாசி மாதமும் அடங்கும். ஏன் இந்த மாதங்களில் சுபகாரியம் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க..சமையல் மேடையில் படிந்துள்ள உப்பு கறையை நொடியில் போக்க., குப்பையில் தூக்கி போடும் 1 ரூபாய் ஷாம்பு கவர் போதும்..

 

Vastu tips for home:

புரட்டாசி மாதத்தில் தான் பெரிய அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை வரும். ஆகையால் இந்த மாதம் தொடக்கத்திலிருந்து முதல் பதினைந்து நாட்கள் மகாளய பட்ச நாளாக வரும். அதாவது நாம் வீட்டின் இறந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பித்ரு கடமைகளை இந்த முதல் பதினைந்து நாட்களில் செய்ய வேண்டும். 

மேலும் படிக்க..சமையல் மேடையில் படிந்துள்ள உப்பு கறையை நொடியில் போக்க., குப்பையில் தூக்கி போடும் 1 ரூபாய் ஷாம்பு கவர் போதும்..

Vastu tips for home:

இந்த நேரத்தில் தான் பித்ருக்கள், பூலோகத்திலிருந்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பிச் செல்வதாக நம்பப்படுகிறது. எனவே, அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுக்கவும், இந்த நாட்களில் நாம் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற சுபகாரியங்களை வைத்தால் அவர்களுக்கு செய்ய வேண்டிய பணியை நாம் முழுமையாக செய்ய முடியாது. இதனால் நாம் பித்ரு தோஷத்திற்கு ஆளாகி விடுவோம். தீராத துன்பத்தை தரக்கூடிய பித்ரு தோஷத்தில் இருந்து நம்மை காக்கவே முன்னோர்கள் இந்த மகாளய பட்ச நாட்கலில் சுப காரியங்கள் எதுவும் செய்ய கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

Vastu tips for home:

பித்ரு தர்ப்பணம்  செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறு நாட்களில் முக்கியமான ஒன்று,  மகாளய அமாவாசை ஆகும். இந்த நாட்களில் நாம் சில பொருட்களைத் தானமாக தர வேண்டும். பித்ருகளுக்கு திதி கொடுக்கும் பொழுது, ஏழைகளுக்கு உணவு, ஆடை, மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு ஆகும். தானத்தில் சிறந்த ஒன்றான, அன்னதானம் செய்தால் தீராத வினையெல்லாம் தீரும் பித்ருக்களின் முழு ஆசிர்வாதம் கிடைக்கும்.  
 

Vastu tips for home:

மகாளய பட்ச நாட்கள் முடிந்ததும் செய்யலாமே என்றால், அதற்கு அடுத்து வரும் பதினைந்து நாட்கள் கொலு வைக்கும் நாட்களாக நமக்கு வந்து விடும். ஆகையால் இந்த நாட்களிலும் இது போன்று சுப காரியங்களில் நாம் கவனம் செலுத்தினால் கடவுளை வணங்குவதை நாம் தவற விட்டு விடுவோம். எனவே தான் இந்த பதினைந்து நாட்களும் நாம் சுப காரியங்கள் எதுவும் செய்ய கூடாது என்று நம் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.மேலும் படிக்க..சமையல் மேடையில் படிந்துள்ள உப்பு கறையை நொடியில் போக்க., குப்பையில் தூக்கி போடும் 1 ரூபாய் ஷாம்பு கவர் போதும்..

Vastu tips for home:

இருப்பினும், இந்த மாதங்களில் வளைகாப்பு, நிலை வாசல் வைத்தல், காது குத்துதல் போன்ற சிறு சிறு சுப காரிங்களை செய்து கொள்ளலாம். ஏனெனில், இவை அந்தந்த மாதங்களில் கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும்.  இதனால் பெருமளவு நமது பூஜைகள், பித்ரு கடமைகள் பாதிக்காது. இருப்பினும், இந்த காலத்தில் பூமி பூஜை போடுவது, புது வீடு கிரகப்பிரவேசம் செய்வது, திருமணம் போன்ற பெரிய சுப நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நமக்கும் நம் சந்ததியினருக்கும் நன்மை தரும்.
 

click me!