உப்பு, கடுகு மற்றும் வேப்பம் பூ
கடுகு, வேப்பம் பூ-வை சமமாக எடுத்து காயவைக்க வேண்டும். அவை சுக்காக காய்ந்தவுடன், மிக்ஸியில் அரைத்து பொடியாக்க வேண்டும். அதையடுத்து ஒரு கரிக்கட்டையை எடுத்து தீயில் காட்டி தனலாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மண் கலயத்தில் கரிக்கட்டையைப் போட்டு, அதன்மீது அரைத்துவைத்த பொடியை தூவி மற்றும் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். அதன் வழியாக வரும் புகையை வீட்டுக்குள் அனைத்து இடங்களிலும் காட்ட வேண்டும். ஜன்னல் ஓரம், இண்டு, இடுக்கு, மூளை, கட்டிலுக்கு அடியில், பீரோ ஓரத்தில் என அனைத்து பகுதிகளிலும் காட்ட வேண்டும். இதனால் வீட்டுக்குள் கொசு வருவது குறைந்துவிடும். இதேபோன்று தினமும் செய்துவந்தால் நாளிடைவில் கொசு வீட்டுக்குள் வரவே வராது.