கொத்தமல்லி இலையை ஒரு ஜாடியில் தண்ணீர் ஊற்றி சேமித்து வைத்தால் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முதலில் கொத்தமல்லி தழையின் தண்டுகளை வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை புதிய பூக்களைப் போல், ஜாடியில் வைக்கவும். ஒரு பிளாஸ்டிக் பை அல்லது ஈரமான துணியால் ஜாடியை முழுவதுமாக மூடி, குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். இவ்வாறு செய்வதால் கொத்தமல்லி இரண்டு வாரங்கள் வரை புதியதாகவும், நீரேற்றமாகவும் இருக்கும்.