கொத்தமல்லி தழை சீக்கிரம் அழுகாமல் இருக்கணுமா? நீண்ட நாட்கள் சேமித்து வைக்க இதை செய்யுங்கள்!

First Published Mar 24, 2023, 3:19 PM IST

coriander leaves: கொத்தமல்லி தழை அழுகி போகாமல் நீண்ட நாள் பிரெஷாக இருக்க வேண்டுமென்றால் சில எளிய வழிகளை பின்பற்றினால் போதும். வாங்க பார்க்கலாம். 

கொத்தமல்லி இல்லாத உணவு வகைகளே இல்லை. சைவமோ அசைவமோ பல உணவுகளில் இந்த கொத்தமல்லி இலைகள் அலங்காரமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் கொத்தமல்லி இலை சுவைக்கு மட்டுமல்ல.. நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. ஆனால் இதை மிகக் குறைந்த நாட்கள் தான் சேமிக்க முடியும். காலையில் வாங்கி வந்த கொத்தமல்லி மாலைக்குள் நன்கு வாடிவிடும். இதனால் அதனுடைய சுவை முற்றிலும் மாறுகிறது. சில எளிய குறிப்புகள் மூலம் கொத்தமல்லியை அதிக நாட்கள் சேமித்து வைக்கலாம். அதனை இப்போது தெரிந்து கொள்வோம்..

கொத்தமல்லியை புதியதாக வைத்திருக்க மற்றொரு சிறந்த வழி, அதை ஈரமான காகித துண்டில் போர்த்தி வைப்பது. பேப்பர் டவலை தண்ணீரில் நனைத்து கொத்தமல்லியை சுற்றி வைக்கவும். அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் அல்லது கொள்கலனில் வைக்கவும். இது கொத்தமல்லி ஈரப்பதத்தைத் தக்கவைத்து, காய்ந்து போவதை தடுக்கிறது. அந்த பிளாஸ்டிக் பை அல்லது கொள்கலனை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். இப்படி செய்தால் கொத்தமல்லி ஒரு வாரம் வரை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கொத்தமல்லி இலையை ஒரு ஜாடியில் தண்ணீர் ஊற்றி சேமித்து வைத்தால் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முதலில் கொத்தமல்லி தழையின் தண்டுகளை வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை புதிய பூக்களைப் போல், ஜாடியில் வைக்கவும். ஒரு பிளாஸ்டிக் பை அல்லது ஈரமான துணியால் ஜாடியை முழுவதுமாக மூடி, குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். இவ்வாறு செய்வதால் கொத்தமல்லி இரண்டு வாரங்கள் வரை புதியதாகவும், நீரேற்றமாகவும் இருக்கும். 

கொத்தமல்லியை ரொம்ப நாள் சேமித்து வைக்க வேண்டுமானால் உறைய வைப்பது நல்லது. இதற்கு கொத்தமல்லியை கழுவி உலர வைக்கவும். அதனை மெல்லியதாக நறுக்கி ஐஸ் கியூப் ட்ரேயில் வைக்கவும். அதில் உள்ள ஒவ்வொரு கனசதுரத்தையும் தண்ணீரால் நிரப்பி அதில் கொத்தமல்லி இலைகளை போட்டு உறைய வைக்கவும். உங்களுக்கு புதிய கொத்தமல்லி இலை தேவைப்படும்போது, ​​ஒரு கனசதுரத்தை எடுத்து உங்கள் சமையலில் பயன்படுத்தவும். 

மூலிகை கீப்பர் (herbs keeper) என்றால் மூலிகைகளை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு கொள்கலன் ஆகும். இதனுடைய அடிப்பகுதியில் தண்ணீர் உள்ளது. இது மூலிகைகளை நீரேற்றமாக வைத்திருக்கும். இது மேலே காற்று சுழற்சியை எளிதாக்குகிறது. கொத்தமல்லி இலைகளை மூலிகை கீப்பரில் வைத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால், கொத்தமல்லி நீண்ட நேரம் வாடாமல் இருக்கும். 

கொத்தமல்லியை நீண்ட காலத்திற்கு புதியதாக வைத்திருக்க அவற்றின் வேர்ப்பகுதியை முதலில் நறுக்கிவிடுங்கள். அகலமான பாத்திரத்தில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கலக்கி கொள்ளுங்கள். இந்த மஞ்சள் நீரில் வேர்களை நீக்கிய கொத்தமல்லி தழையை கொஞ்ச நேரம் ஊற வையுங்கள். அதன் பிறகு இதை கழுவி நிழலில் அல்லது மின்விசிறியில் காய வைத்துவிடுங்கள். கொத்தமல்லி தழையில் நீர் இல்லாமல் நன்கு உலர்ந்த பிறகு ஒரு வெள்ளை காகிதத்தால் அதனை ஒத்தி எடுத்து கொள்ளுங்கள். காற்று புகாத டப்பாவில் இந்த கொத்தமல்லி தழைகளை போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் போதும். 20 நாள்கள் ஆனாலும் அழுகாமல் இருக்கும். 

click me!