படுக்கையறையில் ஒழுங்கற்றுக் கிடக்கும் பொருட்கள்தான் மன அழுத்தத்தின் முதல் படி. நாற்காலியின் மீது குவிந்து கிடக்கும் துணிகள், அறையை நெரிசலாகக் காட்டும் அளவுக்கு அதிகமான அலங்காரப் பொருட்கள், உடைந்த மேஜை போன்ற பயன்படுத்தாத மரச்சாமான்கள் ஆகியவை மனதளவில் ஒருவித சோர்வை உருவாக்கும். ஆய்வுகளின்படி, ஒழுங்கற்ற சூழல் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். பயன்படுத்திய துணிகளை அதற்கான கூடையில் போடுவதும், சுத்தமானவற்றை மடித்து வைப்பதும் அறையை மட்டுமல்ல, உங்கள் மனதையும் இலகுவாக்கும்.
2. உடைந்த கண்ணாடி, பழைய மின்னணு சாதனங்கள்
அதேபோல், உடைந்த கண்ணாடி, பழைய மின்னணு சாதனங்கள் போன்ற பயன்படாத பொருட்களை அறையில் வைத்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். படுக்கையறை என்பது முடிந்தவரை மிகக் குறைவான பொருட்களுடன், சுத்தமாக இருக்க வேண்டும். இந்த மாற்றம், அறைக்குள் நுழையும்போதே ஒருவித நேர்மறை ஆற்றலையும், அமைதியையும் கொடுக்கும்.