உயவு பொருள்:
பொருள்களில் உராய்வு ஏற்படுவதை தடுக்க கிரீஸ் போன்ற உயவு பொருளை பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள கதவில் தேவையில்லாத சத்தம் வர காரணம் அதில் உள்ள உராய்வு தான். வீட்டிலிருக்கும் கதவு, கேட் போன்றவற்றில் சத்தம் எழாமல் இருக்க மீன் பொரித்த எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை வாகனங்களுக்கும் உயவுப்பொருளாக உபயோகிக்கலாம். சைக்கிள் சக்கரங்கள், சங்கிலியில் போட்டால் உராய்வு பிரச்சனை வராது.
உணவுக்கும் பயன்படுத்தலாம்!
வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு கொடுக்கும் உணவில் மீன் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தி வைக்கலாம். அந்த வாசனையை விரும்பி விலங்குகள் நன்றாக சாப்பிடும்.
மீன் பொரித்த எண்ணெய் மட்டுமின்றி, பஜ்ஜி, வடை போன்றவை செய்த மற்ற எண்ணெய்யையும் இதை போல மீண்டும் பயன்படுத்தலாம்.