பலரும் செய்யும் பெரிய தப்பு, ஏசி மாதிரி கூலர் போடும்போதும் எல்லா கதவு, ஜன்னலையும் மூடிவிடுவதுதான். இதனால் அறையில் ஈரப்பதம் (Humidity) அதிகமாகி புழுக்கம் கூடும். கூலர் நன்றாக கூலிங் தர, அதற்கு வெளியில் இருந்து ஃபிரெஷ் காத்து வர வேண்டும். அதனால், கூலரின் பின்பக்கத்தை ஜன்னல் அருகே வைத்துவிட்டு, அறையில் உள்ள காற்று வெளியே செல்ல இன்னொரு ஜன்னலை லேசாக திறந்து வையுங்கள். இதனால் காற்றோட்டம் நன்றாக இருந்து, கூலிங் அதிகமாகும்.
தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள்
கூலரின் குளிர்ச்சி, முழுக்க முழுக்க அதன் பக்கவாட்டில் உள்ள புல் அல்லது ஹனிகோம்ப் பேட்களை (Honeycomb Pads) பொறுத்துதான் இருக்கிறது. இவற்றில் தூசி படிந்தால், தண்ணீர் சரியாகப் பரவாது, அதனால் காற்றும் ஜில்லென்று வராது. வாரத்திற்கு ஒருமுறை இந்த பேட்களை தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள். சாதாரண புல் பேடாக இருந்தால், ஒவ்வொரு சீசனுக்கும் புது பேட்களை மாற்றுவது நல்லது. முடிந்தால், 'ஹனிகோம்ப் பேட்ஸ்' பயன்படுத்துங்கள், அவை அதிக நேரம் தண்ணீரைத் தேக்கி வைத்து, சூப்பரான கூலிங்கைத் தரும்.